2 மர்ம நபர்களை அமெரிக்காவுக்கு ஏற்றிச் செல்ல யூ-டர்ன் அடித்து டெல்லி ஏர்போர்ட்டுக்கு வந்த விமானம்
டெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா கிளம்பிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிய வேகத்தில் யூ-டர்ன் அடித்து திரும்பி வந்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்காவுக்கு கிளம்பியது. விமானம் ஓடுதளத்தில் இருந்து கிளம்பிய உடன் அதை திருப்பிக் கொண்டு வருமாறு விமானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து விமானி விமானத்தை யூ-டர்ன் அடித்து கிளம்பிய இடத்திற்கே கொண்டு வந்தார். விமானத்தில் இரண்டு மர்ம நபர்களை ஏற்றி அனுப்பவே அதை திரும்பி வருமாறு கூறியுள்ளனர். பின்னர் விமானம் 2 மர்ம நபர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றது.
அந்த 2 மர்ம நபர்கள் யார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. அவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லாததால் குடியேற்றத்துறை அவர்களை தங்களிடம் ஒப்படைத்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் யூ-டர்ன் அடித்து வந்து அப்படி யாரை ஏற்றிச் சென்றது என்பது பற்றி மக்கள் சமூகவலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.