நீங்க முதலைகிட்டயிருந்து தப்பிச்சீங்களாமே.. சொல்லவே இல்லை: மோடியிடம் கேட்ட ஒபாமா!
டெல்லி: முதலையிடமிருந்து ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடி உயிர் தப்பியது குறித்து எனக்குத் தெரிய வந்து நான் பெரும் வியப்படைந்தேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.
குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

66வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக, 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. தனி விமானம் மூலம் நேற்று காலை டெல்லி வந்தடைந்த ஒபாமாவிற்கு, இரவு பிரணாப் முகர்ஜி தனது மாளிகையில் விருந்தளித்தார்.
இந்த விருந்தில் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், உ.பி, முதல்வர் அகிலேஷ் யாதவ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி, ‘இன்று நாம் வரலாற்று சாதனை நிகழ்த்தியதற்காக பெருமைப்படுவதாகவும், இந்தியா அமெரிக்கா உறவு சிறப்பான ஒன்று' எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஒபாமா, பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
‘பிரதமர் மோடி மிகவும் உறுதியானவர். தனது தாயாருடன் சேர்ந்து டீக்கடைக்காரராக இருந்த மோடி, இந்தியாவின் பிரதமராக உயர்ந்துள்ளார். இது அசாத்தியமானது, மிகப் பெரிய சாதனையாகும்.
அவர் ஒருமுறை முதலை தாக்குதலில் இருந்து தப்பித்தவர் என்று நான் கேள்விப்பட்டேன். இதுவரை நான் அறியாதது அது.
இன்றைய இரவு மோடி குர்தா போட வேண்டும் என்று நான் நினைத்ததுண்டு. அந்த அளவுக்கு அது என்னைக் கவர்ந்துள்ளது.
எனது சாதனையை அமெரிக்காவில் மட்டுமே சாதிக்க முடியும். அதேபோல மோடியின் சாதனையை இந்தியாவில் மட்டுமே சாதிக்க முடியும். இருவரின் சாதனையும் இரு நாடுகளிலும் அசாதாரணமானது.
பிரதமர் மோடி தினசரி 3 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக என்னிடம் தெரிவித்தபோது நான் ஆச்சரியம் அடைந்தேன். நான் அவரை விட மோசம். தினசரி 5 மணி நேரம் நான் தூங்குகிறேன் என்றார்.
‘நமஸ்தே' என்ற வார்த்தையுடன் தனது உரையைத் துவக்கிய ஒபாமா, இந்தியாவில் தனக்கு அளிக்கப் பட்டு வரும் உபச்சாரத்திற்கு நன்றி' தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications