5 ஆண்டுகளில்.. ஏற்றுமதி துறையில் உத்தர பிரதேசம் 250 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது.. யோகி ஆதித்யநாத்
ஆக்ரா: ஏற்றுமதி துறையில் 250 மடங்கு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் உத்தர பிரதேசம் அடைந்துள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
ஆக்ராவில் தொழில் முனைவோர் மாநாடு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 60 மவாட்டங்களை சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:- இந்தியாவில் கார்பெட்கள் ஏற்றுமதி ஒவ்வொரு ஆண்டும் ரூ.17 ஆயிரம் கோடிக்கு நடைபெறுகிறது.

இதில் 10 ஆயிரம் கோடி ஏற்றுமதி பதோஹி, மிர்சாபூர், வாரணாசி ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் நடைபெறுகிறது. பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறு தொழில்கள் தான் உள்ளன. வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, தற்சார்புடன் அதிக குடும்பங்கள் வாழ வழிவகுக்கிறது. சிறுதொழில் மூலம் மட்டுமே அதிக குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பையும் பொருளாதார தற்சார்பையும் வழங்க முடியும்.
பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் மற்றும் ஊக்குவிப்புடன் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் இந்த துறையை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், பேக்கிங் உள்ளிட்டவற்றில் அரசு கொடுத்த முயற்சியினால் நல்ல பலன்கள் கிடைத்தன. உத்தர பிரதேசத்தில் சர்வதேச முதலீடுகள் ஆரம்பித்துள்ளன. 38 லட்சம் கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை மாநிலம் பெற்றுள்ளது.
இதன் மூலம் 1 கோடியே 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசுடன் இணைந்து நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம், தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழலை வழங்க உள்ளது" என்றார்.
தொடர்ந்து சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது. இதற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அமைப்பே எடுத்துக்காட்டாக உள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையுடன் விளையாட யாரையும் அரசு அனுமதிக்காது. யாராவாது சட்டம் ஒழுங்கிற்கு கேடு விளைவித்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications