மத்திய அரசின் நெருக்கடி... உ.பி, கர்நாடகா, அஸ்ஸாம் ஆளுநர்கள் அடுத்தடுத்து ராஜினாமா!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் நெருக்கடியால் உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் அஸ்ஸாம் மாநில ஆளுநர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

UP, Assam, Karnataka Governors step down

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது முதலே தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட மாநில ஆளுநர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஒரு சில மாதங்களில் பதவிக் காலம் முடியும் ஆளுநர்களை நீக்குவதில்லை என்று மோடி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அத்துடன் ஆளுநர்களான கேரளாவின் ஷீலா தீட்சித், உத்தப்பிரதேசத்தின் ஜோஷி, பஞ்சாபின் சிவராஜ் பாட்டீல், மேற்கு வங்கத்தின் எம்.கே.நாராயணன், குஜராத்தின் கமலாபென், மத்திய பிரதேசத்தின் நரேஷ் யாதவ் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ஆளுநர் பி.எல். ஜோஷி இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டு அதை பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைக்கும் அனுப்பி வைத்துள்ளது.

இதன் பின்னர் கர்நாடகா மாநில ஆளுநர் பரத்வாஜ், அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஜே.பி. பட்நாயக், ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

மத்திய அரசு கொடுத்த நெருக்கடிகளால் இந்த 3 ஆளுநர்களைப் போல மேலும் பல ஆளுநர்கள் ராஜினாமா செய்யக் கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+