கொழுந்தியாளுடன் பேச்சு.. எக்குத்தப்பா எகிறிய குடும்ப உறவுகள்.. உத்தர பிரதேச மைத்துனருக்கு வந்த சோதனை
லக்னோ: கள்ளக்காதல் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், அதுவரை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பங்களும் பிரிவை சந்தித்து வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட தம்பதிகளின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது.. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் உள்ளது கமலுபீர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் கேசவ் குமார்.. இவருக்கு 28 வயதாகிறது.. திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

கொழுந்தியாள் - மைத்துனர்
இதே கிராமத்தில்தான், கேசவ் குமாரின் மாமியார் வீடும் உள்ளது.. எனவே, அடிக்கடி மாமியார் வீட்டுக்கு சென்றுவந்தபோது, கேசவ் குமாருக்கும், அவருடைய கொழுந்தியாள் கல்பனா என்ற 19 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.. இது கள்ளக்காதலாக உருவானது.
ஒருகட்டத்தில் இவர்களின் தகாத உறவு, இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது.. இதனால் இருவரையும் கண்டித்தனர்.. எனினும் அவர்களது அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்த இந்த கள்ளக்காதல் ஜோடி, கடந்த மாதம் 23ந்தேதி வீட்டைவிட்டு ஓடிவிட்டார்கள்..
அசிங்கப்படுத்திய மாமா
கேசவ் குமாரின் இந்த செயல், 22 வயதான மைத்துனர் ரவீந்திரனுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது... அக்காள் கணவர் என்று நம்பி வீட்டுக்குள் விட்டதால், தன்னுடைய தங்கையுடனே கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தையும் இப்படி அவமானப்படுத்தி விட்டாரே? என்று ஆவேசம் அடைந்தார்..
எனவே, அக்கா கணவரை பழிவாங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்றும் ரவீந்திரன் முடிவு செய்தார்..
ஆனால், இவர் ஏற்கனவே கேசவ் குமாரின் 19 வயது தங்கையை காதலித்து வந்தார். எனினும் அக்கா கணவரை பழிவாங்குவதற்காக மறுநாளே, அவரது தங்கையை அழைத்துக்கொண்டு ரவீந்திரனும் வீட்டைவிட்டு ஓடினார்.
2 ஜோடிகள் - 2 குடும்பங்கள்
இதுகுறித்து 2 குடும்பத்தினரும் போலீசில் புகார்களை தந்தனர்.. இதையடுத்து இந்த புகார்களை பெற்றுக் கொண்ட போலீசார், 2 ஜோடிகளையும் வலைவீசி தேடி வந்தனர்.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு 4 பேரையும் ஒருவழியாக போலீசார் கண்டுபிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.. அதேபோல புகார்களை 2 குடும்பத்தினரையும் போலீசார் வரச்சொல்லி, பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இறுதியில், 2 ஜோடிகளையும், 2 குடும்பத்தினரும் மன்னித்துவிட்டனர்.. பிறகு 2 ஜோடிகளும் அவரவர் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் கிளம்பி சென்றார்கள்.. ஆனால், கேசவ் குமாரின் மனைவியும், அந்த 2 குழந்தைகளும்தான் இப்போது பரிதாபத்துடன் நிற்கிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications