உத்திரகாண்ட் சம்பவம்..அவசர உதவி எண்கள்...முதல்வர் ராவத் அறிவிப்பு
டேராடூன் : உத்திரகாண்டில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சம்பவத்தால் அவசர உதவி எண்களை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார்.
உத்திரகாண்டின் சாமோளி பகுதியில் பனிப்பாறை உருகியதால் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் மின் திட்டத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த 100 முதல் 150 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் அவசர உதவி எண் 1070 அல்லது 9557444486 முதல்வர் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம் எனவும் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட்டில் இயற்கை பேரழிவு.. உடைந்த பனிப்பாறைகள்.. பயங்கர வெள்ளபெருக்கு.. என்ன நடந்தது! ஷாக்
இதற்கிடையில் தவ்லிகங்கா ஆற்றிலும் திடீரென நீரின் அளவு அதிகரித்து வருவதால் மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. உயிர்களை காப்பதே முதன்மையானது என பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார்.