Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உத்தரகாண்டில் 9 காங். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நாளை தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 10-ந் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள முடியுமா? என்பது குறித்த தீர்ப்பை அம்மாநில உயர்நீதிமன்றம் நாளை அளிக்க உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் கடந்த மார்ச் மாதம் அப்போதைய முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

Uttarakhand rebel MLAs issue: High Court to pronounce verdict tomorrow

இந்த நிலையில் தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 மணி நேரம் நடந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி யு.சி.தியானி, நாளை காலை 10.15 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவேன் என்றார்.

உத்தரகாண்ட் சட்டசபையில் வரும் 10-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+