உத்தரகாண்டில் 9 காங். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நாளை தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 10-ந் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள முடியுமா? என்பது குறித்த தீர்ப்பை அம்மாநில உயர்நீதிமன்றம் நாளை அளிக்க உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் கடந்த மார்ச் மாதம் அப்போதைய முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

Uttarakhand rebel MLAs issue: High Court to pronounce verdict tomorrow

இந்த நிலையில் தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 மணி நேரம் நடந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி யு.சி.தியானி, நாளை காலை 10.15 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவேன் என்றார்.

உத்தரகாண்ட் சட்டசபையில் வரும் 10-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+