உத்தரகாண்டில் 9 காங். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நாளை தீர்ப்பு
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 10-ந் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள முடியுமா? என்பது குறித்த தீர்ப்பை அம்மாநில உயர்நீதிமன்றம் நாளை அளிக்க உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் கடந்த மார்ச் மாதம் அப்போதைய முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 மணி நேரம் நடந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி யு.சி.தியானி, நாளை காலை 10.15 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவேன் என்றார்.
உத்தரகாண்ட் சட்டசபையில் வரும் 10-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications