உத்தர்காசி சுரங்க மீட்பு பணி மீண்டும் நிறுத்தம்.. 46.8 மீட்டரில் சிக்கல்.. அங்கேயே தங்கும் முதல்வர்!
உத்தர்காசி: உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்பதற்காக நடைபெற்று வந்த துளையிடும் பணியின்போது ஆகர் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் பணி நிறுத்தப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சில்க்யாரா - பார்கோட் இடையேயான 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. உள்ளே தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த இடத்தில் பாதிப்பு ஏற்படாத போதும், நுழைவு வாயிலில் பாறைகள் சரிந்து மூடியதால் 41 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். ஜார்கண்ட், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குகைக்குள் சிக்கியது போல 200 மீட்டர் இடைவெளியில் சிக்கிக் கொண்டனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த சுரங்கத்தில் ஏற்கனவே இருந்த 6 அங்குல பைப் சேதமடையாமல் இருந்ததால், அதன் வழியாக வாக்கி டாக்கியை அனுப்பி அவர்கள் உயிருடன் இருப்பதை மீட்புக் குழுவினர் உறுதி செய்தனர். தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக, உடனடியாக, குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டன. சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், விண்வெளி வீரர்களுக்கான உணவு முறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன.
தொழிலாளர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க மாத்திரைகளும் வழங்கப்பட்டன. சுரங்கத்தில் 57 மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதை கண்டறிந்த அதிகாரிகள் எளிதாக மீட்டுவிடலாம் என நினைத்திருந்த நிலையில், ஒவ்வொரு நகர்வும் கடும் சவாலாக மாறியது. இதனால், மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவில் இருந்து நவீன துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 10 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் நலமாக இருக்கும் வீடியோ வெளியாகி, அவர்களின் உறவினர்களுக்கு சற்று நிம்மதி அளித்தது. எனினும், மீட்புப் பணியில் சிக்கல் நீடித்துக் கொண்டே செல்கிறது. மொத்தம் உள்ள 57 மீட்டரில் 46 மீட்டர் தொலைவுக்கு துளையிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் சில மணி நேரங்களில் துளையிடும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
மீட்கப்படும் தொழிலாளர்கள் வெளியே வர வசதியாக, அந்த இடம் வரை கனமான குழாய்கள் இடிபாடுகளுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக உத்தர்காசியில் 41 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் 41 பேரும் இன்றைக்குள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்தது. மீட்புக் குழுவினர் கிடைமட்டமாக ஆகர் இயந்திரத்தை கொண்டு துளையிட்டு உள்ளே நகர்ந்து கொண்டிருந்தனர். இதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆகர் இயந்திரம் பொருத்தப்பட்ட கான்கிரீட் தளம் திடீரென சேதமடைந்தது. இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் ஆகர் இயந்திரம் துளையிடும்போது இரும்பு கர்டர் குறுக்கிட்டதால் அதனை வெட்டுவதற்கு ஆறு மணி நேரம் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 12ஆம் தேதி மீட்புப் பணி தொடங்கியதில் இருந்து துளையிடும் பயிற்சி நிறுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஆகர் இயந்திர கான்கிரீட் தள சேதங்களை சரிசெய்து மீண்டும் பணிகளை தொடங்க அடுத்த 14 மணி நேரம் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
இதுவரை சுரங்கப்பாதையில் 48.8 மீட்டர் தொலைவுக்கு மீட்புக்குழுவினர் ட்ரில் செய்துள்ளனர். தற்போது சேதமடைந்த பகுதி பழுது பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம். நாளை காலை 9 மணிக்குப் பிறகு மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கி வந்த நிலையில், தொழில்நுட்ப பிரச்சனையால் பின்னடைவு ஏற்பட்டாலும், மீட்பு பணி வெற்றிகரமாக முடிவடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மீட்புப் பணிகளைக் கண்காணிக்க உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சுரங்கம் உள்ள இடத்தில் ஒன்று இரவு தங்குகிறார். சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியை கண்காணிப்பதற்காக முதல்வர் தாமி நேற்று இரவும் உத்தரகாசியில் தங்கினார். அங்கு தனது தற்காலிக முகாம் அலுவலகத்தை அமைத்துள்ளார் முதல்வர் புஷ்கர் சிங் தாமி.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications