Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாக்டருக்கு செக்ஸ் டார்ச்சர்.. சினிமா பாணியில் எய்ம்ஸ்க்குள் காரில் சென்று அதிகாரியை தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவருக்கு நர்சிங் அதிகாரி ‛செக்ஸ்' டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதுபற்றிய புகார் கிடைத்த நிலையில் போலீசார் போலிரோ வாகனத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் வார்டுக்குள் சென்று நர்சிங் அதிகாரியை தூக்கிய வீடியோ வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சதீஷ் குமார் என்பவர் நர்சிங் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதேபோல் இந்த மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் சதீஷ் குமார், பெண் டாக்டருக்கு ‛செக்ஸ் டார்ச்சர்' கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Uttarkhand police enters AIIMS hospital and arrest accused who allegedly molested the doctor

அதாவது சதீஷ் குமாருக்கு அந்த பெண் டாக்டருக்கு அவ்வப்போது செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த 19ம் தேதி மருத்துவமனையின் அறுவை சிகிச்சைக்கான யூனிட்டில் வைத்து அவர், இளம்பெண் டாக்டரிடம் தவறாக நடந்து கொண்டதோடு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு பெண் டாக்டர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சதீஷ் குமார் அவரை விட்டுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் பெண் டாக்டரின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பிய சதீஷ் குமார், தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமையால் பெண் டாக்டர் மனம் உடைந்து போனார். இதபற்றி அவர் உடனடியாக முதலில் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகாரளித்தார். மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை தொடங்கியது.

இந்த விசாரணையின்போது சதீஷ் குமார் மீது குற்றம் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கிடையே தான் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் போலீசிலும் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமாரை அதிரடியாக கைது செய்தனர். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் போலீசார் சதீஷ் குமாரை கைது செய்ய பின்பற்றிய நடைமுறை தான்.

அதாவது போலீசார் கைது செய்ய வந்தபோது சதீஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையின் பொதுப்பிரிவில் பணியில் இருந்தார். இதையடுத்து சினிமா பாணியில் மருத்துவமனையின் பொது வார்டுக்குள்ளேயே போலிரோ போலீஸ் வாகனத்தை போலீசார் ஓட்டி சென்றனர். மருத்துவமனையின் ரேம்ப் பாதை வழியாகவும் போலீஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகு சதீஷ் குமாரை போலீசார் கைது செய்து காரில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதில், போலீஸ் வாகனம் மருத்துவமனையின் ரேம்ப் பாதையில் வருவது, வார்டில் நுழைந்த போலீஸ் வாகனத்தை பார்த்து நோயாளிகள், அவர்களுடன் இருப்பவர்கள் அதிர்ச்சியடைவது மற்றும் ஸ்ட்ரெச்சரை நகர்த்தி போலீஸ் வாகனத்துக்கு வழிவிடுவது போன்ற பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதுபற்றி ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவுமனையில் மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் குமார் கூறுகையி்ல, ‛‛குற்றம்சாட்டப்பட்ட நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. பெண் டாக்டர் அளித் புகாரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பெண் டாக்டர் சார்பில் போலீசிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவரை பிடித்து சென்றுள்ளனர்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+