ஆம் ஆத்மியில் இணைந்தார் மகாத்மா காந்தியின் முன்னாள் பி.ஏ. கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

V Kalyanam, Mahatma Gandhi's ex- personal secretary joins AAP
டெல்லி: 9 1வயதான சுதந்திரப் போராட்ட வீரர் வெங்கிட கல்யாணம், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இவர் மகாத்மா காந்தியின் தனி உதவியாளராக இருந்தவர் ஆவார்.

ஞாயிற்றுக்கிழமை இவர் ஆம் ஆத்மில் தன்னை இணைத்துக் கொண்டார். மகா்த்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அந்தத் தகவலை முதலில் நேருவுக்கும், சர்தார் வல்லபாய் படேலுக்கும் தெரிவித்தது கல்யாணம்தான்.

கோட்சே, காந்தியா சுட்டுக் கொன்றபோது காந்திக்குப் பின்னால்தான் நின்று கொண்டிருந்தார் கல்யாணம். அப்போது அவரது வயது 28தான்.

சென்னையில் வசித்து வரும் கல்யாணம், மிகவும் எளிமையாக, யாருக்குமே அதிகம் தெரியாத அளவுக்கு அடக்கமாகவும் வாழ்ந்து வருபவர்.

ஆம் ஆத்மி குறித்து அவர் கூறுகையில், பயந்தால் உயிர் வாழ முடியாது. பாதுகாப்பு கேட்டால், உயிர் வாழத் தகுதியற்றவர்களாக ஆகி விடுகிறோம். பாதுகாவலர்கள் தேவையில்லை என்ற கெஜ்ரிவாலின் பேச்சு எனக்குப் பிடித்திருக்கிறது. அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்துள்ளேன் என்றார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போதுதான் சுதந்திரப் போராட்டத்தில் கல்யாணம் சேர்ந்தார். பின்னர் காந்தியடிகளின் கடைசிக் காலத்தில் அவருடைய தனி உதவியாளராக மாறினார். 1943 முதல் 48 வரை உதவியாளராக இருந்தார். அவரது முக்கிய வேலையே , காந்திக்கு வருகிற கடிதங்களைப் பிடித்து அவருக்குக் கொடுப்பதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+