மத்திய அமைச்சர் நாராயணசாமி மனைவி மரணம்

Subscribe to Oneindia Tamil

narayanasamy wife
டெல்லி: மத்திய அமைச்சர் நாராயணசாமி மனைவி கலைச்செல்வி இன்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 54.

கலைச்செல்வி கடந்த மே மாதம் டெல்லியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வேன் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளையில் இரத்தம் உறைந்தது.

இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரது தலையில் தையல்களும் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கலைச்செல்வியின் தலையில் போடப்பட்ட தையலில் இருந்து ரத்தம் வந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சேர்ந்த அன்று இரவே அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி இன்று அதிகாலை 4 மணிக்கு மரணமடைந்தார். கலைச்செல்விக்கு நாராயணசாமி தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

டெல்லியில் விமானம் மூலம் கலைக்செல்வி உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டு இங்கிருந்து காரில் புதுச்சேரி கொண்டு செல்லப்பட்டுகிறது. அவரது உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

கடந்த 18ஆம் தேதி நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி மரணம் அடைந்துவிட்டதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+