எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு சோதனை - பின்னணி என்ன?
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இது வேலுமணி விவகாரத்தில் நடத்தப்படும் இரண்டாவது சோதனையாகும்.
கோயம்புத்தூரின் மைல்கல் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு இயக்குநரக ஆய்வாளர் எழிலரசி பதிவு செய்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக சொத்துகளை சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், ஹேமலதா அன்பரசன், உறவினர் சந்திரசேகரன் மற்றும் நண்பர்கள் 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
வேலுமணி மற்றும் உறவினர்களின் பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மூலமும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் சொத்து, நகை சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சென்னை, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
இது தொடர்பான விரிவான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பிற செய்திகள்:
- இந்திய ஏவுகணை சம்பவம்: "திருப்பி அடித்திருப்போம், கட்டுப்படுத்திக் கொண்டோம்" - இம்ரான் கான் நடிகர் அஜித் மீது உருவக் கேலியா? பதில் கொடுத்த மேலாளர் - நடந்தது என்ன?
- ஸ்டாலின் உத்தரவுக்குக் கட்டுப்படாத திமுகவினர்; கொதிக்கும் கூட்டணிக் கட்சியினர்
- பாலுறவு இன்பத்தை 40 வயதுக்குப் பிறகு அதிகரிப்பது எப்படி? - நிபுணரின் விளக்கம்
- யுக்ரேன் உள்ள வீரர்களுக்காக சீனாவிடம் ஆயுதம் கேட்டோமா? ரஷ்யா விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?













Click it and Unblock the Notifications