"சக்கர நாற்காலி ஏறி, இமயம் தொட்டிருக்கிறாய்.." மமதா பானர்ஜிக்கு வைரமுத்து வாழ்த்து!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
பல்வேறு எதிர்க் கட்சித் தலைவர்களும் இந்த வெற்றியை பாராட்டி வருகின்றனர், வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் சென்று பிரச்சாரம் செய்தும் மம்தா பானர்ஜி வெற்றியை தடுக்க முடியவில்லை. எனவே இதை சிறப்பு வெற்றியாக கொண்டாடி வருகின்றனர், எதிர்கட்சியினர்.
இந்த நிலையில்தான் கவிஞர் வைரமுத்து, மம்தா பானர்ஜி வெற்றியை பாராட்டி ஒரு கவிதை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதை பாருங்கள்:
பெண் சிங்கமே! கர்ப்பத்தை உதைத்துப் பிறந்த பிறவிப் போராளியே!
உன் வெற்றியை வானமே அண்ணாந்து பார்க்கிறது
நீ இழந்தவை கால்கள் அடைந்தது சிறகு ஆகவேதான் சக்கர நாற்காலி, ஏறி
இமயம் தொட்டிருக்கிறாய்
உலகம் இந்தியாவுக்குள் மேற்கு வங்கத்தை பார்த்தது
இன்று 'மேற்கு வங்கத்துக்குள்' இந்தியாவைப் பார்க்கிறது
நல்லாட்சி நல்கு தாயே தமிழ் மண்ணிலிருந்து - ஒரு தமிழ்க்கவி வாழ்த்துகிறேன்
அம்மா உணவகம் சூறையாடல்...கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- டாக்டர் ராமதாஸ், டிடிவி தினகரன் கண்டனம்
இவ்வாறு வைரமுத்து கவிதை வடிவத்தில் மம்தா பானர்ஜியை வாழ்த்தியுள்ளார்.