ஆந்திராவை நோக்கி நகரும் ‘வர்தா’ புயல் - டிச.12 இல் நெல்லூர் அருகே கரையை கடக்கும்
வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 12ம்தேதி நெல்லூர் காகிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ம
டெல்லி/சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 12ல் நெல்லூர் காகிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதால் வரும் 11ஆம் தேதி முதல் அங்கு பலத்த மழை பெய்யும், கடலில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. அதற்கு வர்தா புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயலானது விசாகப்பட்டினத்தில் இருந்து 1,060 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அந்த மான் நிக்கோபர் தீவுகளின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். அந்தமான் தீவு மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
இதனால், 11ஆம் தேதி முதல் ஆந்திராவில் பலத்த மழை பெய்யும். கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை அறிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்று மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், வங்கக்கடலில் உருவான புயல் நெல்லூர் - காக்கிநாடா இடையே 12ஆம் தேதி முற்பகல் கரையை கடக்கும் என்றார்.
விசாகபட்டினத்துக்கு தென்கிழக்கே 1060 கி.மீ தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது. புயல் உருவாகி உள்ளதால் 10-ம் தேதி முதல் ஆந்திர கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் அண்மையில் உருவான நடா புயல் கடந்த 2ஆம் தேதி வலுவிழந்து காரைக்கால் அருகே கரையை கடந்தது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு புயல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ராமேஸ்வரத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதுபுதுவை, காரைக்கால், கடலூர், நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது, தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications