முடங்கிய ரயில் சேவை.. பஞ்சாப் விவசாயிகளின் 3 நாள் மறியல் தொடங்கியது! பின்னணி என்ன?
சண்டிகர்: பஞ்சாப் விவசாயிகள் இன்று முதல் 3 நாட்களுக்கான ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இன்றைய போராட்டத்தில் பல இடங்களில் இருந்து டிராக்டரில் விவசாயிகள் வந்து தண்டவாளத்தில் அமர்ந்து ரயிலை மறித்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி அரசு நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் பஞ்சாப்பில் கனமழை பெய்தது. இதில் பல ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டன.

இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம், குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் முழுவதும் 3 நாள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத்தின் அறிவித்தனர். அதன்படி இன்று ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் இன்று நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இன்றைய போராட்டத்தில் விவசாயிகள் டிராக்டரில் போராட்ட களத்துக்கு வந்து தண்டவாளத்தில் அமர்ந்தனர். போலீசார் தடுக்க முயன்றாலும் அவர்கள் கேட்காமல் தண்டாவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் செய்தனர். இதனால் பல ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. மேலும் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் என்பது பஞ்சாப்பில் நடந்து வருகிறது.
முன்னதாக இதுபற்றி கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில், ‛‛மொத்தம் 19 விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினோம். இந்த கூட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்துக்கு முடிவு செய்யப்பட்டது. இதில் பங்கேற்கும் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இதுதவிர ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து சில விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு கொடுக்க உள்ளனர். பஞ்சாபின் மோகா, ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், ஜலந்தர், தர்ன் தரன், சங்ரூர், பாட்டியாலா, ஃபெரோஸ்பூர், பதிண்டா மற்றும் அமிர்தசரஸ் உள்பட மொத்தம் 12 இடங்களில் ரயில் மறியல் நடத்தப்படும்.
இந்த போராட்டத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, பார்தி கிசான் யூனியன், பார்தி கிசான் யூனியன், ஆசாத் கிசான் கமிட்டி தோபா, பார்தி கிசான் யூனியன், பார்தி கிசான் யூனியன், பார்தி கிசான் யூனியன், கிசான் மகாபஞ்சாயத் (ஹரியானா), பக்ரி சம்பல் ஜட்டா (ஹரியானா) ஆகிய விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். மேலும் முற்போக்கு உழவர் முன்னணி (உத்தர பிரதேசம்), பூமி பச்சாவ் முஹிம் (உத்தரகாண்ட்) மற்றும் ராஷ்ட்ரிய கிசான் சங்கதன் (இமாச்சல பிரதேசம்) உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப்பில் இன்று முதல் 3 நாட்கள் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட உள்ளது. மேலும் ரயில் மறியல் போராட்டத்தை தடுக்கும் வகையில் பஞ்சாப்பில் பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications