வெங்கையாவுக்கு இதுக்கெல்லாம் கருத்து சொல்ல முடியாதாம்...!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திர போலீஸார் நடத்திய கொடூரத் தாக்குதலில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து பதில் அறிக்க முடியாது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சராக உள்ள ஆந்திரத்து வெங்கையா நாயுடு.

இந்த சம்பவம் குறித்து இதுவரை அவர் வாயே திறக்காமல் உள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சித்தூர் சம்பவம் பற்றிய முழு தகவல் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அங்கு பெரிய அளவில் செம்மரக்கடத்தல் நடைபெற்று வருகிறது என்பது தெளிவான ஒன்று.

Venkiah refutes to comment on Andhra killings

சேசாசலம் வனப்பகுதி பாதுகாக்கப்பட்டது என்றும், அதற்குள் நுழையக் கூடாது என்றும் ஆந்திர அரசு தொடக்கத்தில் இருந்தே மக்களை எச்சரித்து வந்திருக்கிறது. ஆனால், அங்கு செம்மரக் கடத்தல் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

இதன் பின்னணியில் செம்மரக் கடத்தல்காரர்கள் உள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மை வெளிவரட்டும். மத்திய அமைச்சர் என்பதால் மாநில அரசு நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றார் அவர்.

அது சரி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+