ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தருணம் வந்துவிட்டதாம்... சொல்கிறது வி.ஹெச்.பி.
டெல்லி: ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் தருணம் வந்துவிட்டதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
குஜராத்தில் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்துத்துவா அமைப்புகள் இடஒதுக்கீடே வேண்டாம் என்ற குரலை ஒலித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலாலர் சுரேந்திரா ஜெயின் கூறியதாவது:
இடஒதுக்கீடு பிரச்சினையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஒரு நிலையான கொள்கையைக் கொண்டுள்ளது. ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட கால கோரிக்கை.

இந்திய அரசியலமைப்பை கட்டமைத்தவர்களுக்கும் இடஒத்துக்கீடு குறித்து இதே நிலைப்பாட்டுடன் தான் இருந்திருக்கின்றனர். முதலில் சில ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அளித்துவிட்டு பின்னர் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அவர்கள் வழிகாட்டுதலாக இருந்தது.
குஜராத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை உற்று நோக்கும்போது உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு ஆணையம் அமைத்து இடஒதுக்கீடு ஏன் தேவை எங்கு தேவை என்பன குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவே தோன்றுகிறது. இடஒதுக்கீடு என்பதை பொருளாதாரத்தின் பின் தங்கியவர்களுக்கு மட்டும் வழங்கும் வகையில் வடிவமைக்கலாம்.
இட ஒதுக்கீடு கோரி ஓரிடத்தில் நடைபெறும் போராட்டம் மற்றொரு இடத்துக்கும் பரவும். உ.பி.யில் ஜாட் சமூகத்தினரும், ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவரும் போராட்ட களத்தில் குதிப்பர்.
இடஒதுக்கீடு சர்ச்சையை அதிகப்படியான சமூகத்தினர் கிளப்பும்போது, அதை தீவிரமாக பரிசீலிப்பது அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடஒதுக்கீடு போராட்டங்கள் மீது தான் நம் நாட்டின் கட்சிகள் அரசியலை வளர்க்கின்றன.
இவ்வாறு சுரேந்திரா ஜெயின் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications