நான்கு பேரால் ஈவ் டீசிங் செய்யப்பட்ட மாணவி... தீக்குளித்தார்!
மதுரா: உ.பி. மாநிலம் மதுராவில் நான்கு இளைஞர்களால் ஈவ் டீசிங் செய்யப்பட்ட 7ம் வகுப்பு மாணவி வேதனை தாங்காமல் தீக்குளித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை தற்போது ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மதுராவைச் சேர்ந்த அந்த மாணவி நான்கு இளைஞர்களால் ஈவ் டீசிங் செய்யப்பட்டார். அவர்களின் கேலி கிண்டல்களால் அவமானமடைந்த அந்த மாணவி தனது வீட்டுக்கு வந்து தீக்குளித்து விட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆக்ரா மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
அந்த மாணவியிடம் மாஜிஸ்திரேட் ஹேம் சிங் வாக்குமூலம் பெற்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், இக்பால், லாலா, சுமீத், ஆகாஷ் ஆகிய நான்கு குற்றவாளிகளில் இருவரைக் கைது செய்துள்ளனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications