வன்முறையில் பலியாவோருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் வன்முறை மற்றும் கலவரங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரூ. 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டின் பல இடங்களில் வகுப்பு கலவரம் மற்றும் நக்சலைட்டுகளின் வன்முறையால் அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். இந்த மோதல் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தோருக்கும், முழுமையாக பாதிக்கப்பட்டோருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு ரூபாய் ரூ. 3 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கி வருகிறது.
இந்த தொகையை ரூபாய் 3 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கி இருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications