புருஷன் வேண்டாம் புரோகிதர் போதும்... நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன புதுப்பெண்

இன்றைய கால கட்டத்தில் திருமணம் நடைபெறுவது பெரிய விசயமாக இருக்கிறது. அந்த பெண்ணை பாதுகாப்பது அதைவிட பெரிய விசயமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் புதுமணப்பெண் ஒருவர் திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் ஓடிப

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் புதுமணப்பெண் ஒருவர் தனது கணவரை விட்டு விட்டு திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் மாயமாகிவிட்டார். அவர் ஓடிப்போன போது சீதனமாக கொடுத்த நகைகள், பணத்தையும் எடுத்துக்கொண்டு போனதுதான் சோகம்.

காதல் பிரச்சினையில் சில பெண்கள் திருமணத்திற்கு முதல்நாள் ஓடிப்போவார்கள். அந்த மணமகனுக்கு வேறு பெண்ணை பார்த்து அதே மணமேடையில் முடித்து வைப்பார்கள். ஆனால் விதிசா மாவட்டத்தில் நடந்த விவகாரம் சற்றே வித்தியாமானது. திருமணமாகி இரண்டு வாரம் கழித்து மணப்பெண் ஓடிப்போய்விட்டார்.

விதிசா அருகே டோரிபக்ரோட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான ரீனாபாய்க்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இந்த மாதம் 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சொந்த பந்தங்கள் புடைசூழ, நண்பர்கள் வாழ்த்த நடந்த இந்த திருமணத்தை வினோத் மகாராஜ் என்ற புரோகிதர் நடத்தி வைத்தார். அந்த புரோகிதர்தான் தனக்கு வில்லனாக வரப்போகிறார் என்று மாப்பிள்ளைக்கு அப்போது தெரியாது.

மயங்கிய ரீனா

மயங்கிய ரீனா

திருமணத்தை நடத்தி வைக்க வந்த புரோகிதருக்கும் ரீனாபாய்க்கும் எப்படியோ கனெக்சன் ஆகிவிட்டது. மந்திரம் சொல்லும் போதே மயக்கி விட்டாரோ என்னவோ, ரீனாபாய்க்கு கணவன் மீது பிடிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மாயமான ரீனா

மாயமான ரீனா

திருமணமான நாளில் இருந்தே எதையே பறிகொடுத்தது போல இருந்தார் ரீனாபாய், புதுப்பெண் என்பதால் பழக பயப்படுகிறார் என்று நினைத்தார் அந்த பெண்ணின் கணவன். மே 23ஆம் தேதி முதல் மாப்பிள்ளை வீட்டில் இருந்தே எஸ்கேப் ஆகிவிட்டார் ரீனாபாய். ஊரெல்லாம் வலைவீசி தேடியும் கிடைக்கவில்லை.

நகை பணத்தோடு ஓட்டம்

நகை பணத்தோடு ஓட்டம்

ரீனாபாயை தேடும்போதுதான் அவர் சீதனமாகக் கொண்டு வந்த நகை, பணமும் இல்லாதது தெரியவந்தது இது அந்த மாப்பிள்ளையின் உறவினர்களுக்கு அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. விசாரித்தபோதுதான் புரோகிதர் வினோத் மகாராஜா உடன் ரீனாபாய் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

புரேகிதரே போதும்

புரேகிதரே போதும்

கணவனையும் உறவினர்களையும் விட்டுவிட்டு பிறந்த வீட்டு கவுரவம், புகுந்த வீட்டின் மானம் மரியாதையை காற்றில் பறக்க விட்டு புரோகிதருடன் எஸ்கேப் ஆகிவிட்டார் ரீனாபாய். தனக்கு திருமணம் செய்து வைத்த புரோகிதர் உடன் செல்லும் அளவுக்கு அப்படி என்ன மந்திரம் போட்டாரோ தெரியலையே. விதிசா முழுக்க இந்த பேச்சுதான் விவகாரமாக கிளம்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+