த்தூ....என பத்திரிகையாளர்களை காறி துப்பியதற்கு பிரஸ் கவுன்சிலில் வருத்தம் தெரிவித்தார் விஜயகாந்த்!
பத்திரிகையாளர்களை காறி துப்பியதற்கு பிரஸ் கவுன்சிலில் விஜயகாந்த் இன்று வருத்தம் தெரிவித்தார்.
டெல்லி: பத்திரிகையாளர்களை த்தூ... என காறி துப்பியதற்கு பிரஸ் கவுன்சிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வருத்தம் தெரிவித்தார்.
விஜயகாந்தைப் பொறுத்தவரையில் பத்திரிகையாளர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து பேசுவதுதான் வழக்கம். டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க என ஒருமையில் விமர்சித்தார்.

காறி துப்பிய செயல்
பின்னர் நாயே என திட்டினார். இதேபோல் தன்னிலை மறந்தவராக 'த்தூ...' என காறி துப்பினார். விஜயகாந்தின் இந்த அநாகரீக செயல்கள் தொடர்பாக பிரஸ் கவுன்சிலுக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பிரஸ் கவுன்சில் வழக்கு
இதனையடுத்து பிரஸ் கவுன்சில் தாமாகவே முன்வந்து விஜயகாந்த் மீது வழக்குகள் பதிவு செய்தன. அத்துடன் இந்த வழக்கில் விஜயகாந்த் பதில் தரவும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு சாக்கு போக்கு பதிலையே விஜயகாந்த் தெரிவித்து வந்தார்.

டெல்லியில் விசாரணை
இந்த நிலையில் டெல்லியில் இன்று பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே. பிரசாத் முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது விஜயகாந்தின் வழக்கறிஞர் ஆஜரானார். இந்த விசாரணையின் போது, பத்திரிகையாளர்களை அவமதிக்கும் எண்ணம் விஜயகாந்துக்கு இல்லை.

வருத்தம் தெரிவித்த விஜயகாந்த்
விஜயகாந்த் அவ்வாறு நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்கப்படுவதாக வழக்கறிஞர் கூறினார். விஜயகாந்த் வருத்தம் தெரிவித்ததால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications