முதலை கண்ணீர்.. முதலை கண்ணீர்னு சொல்வோமே.. அந்த முதலைக்கே கண்ணீர் வடித்த கிராம மக்கள்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் இறந்த ஒரு முதலைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி இறுதி சடங்குகளையும் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநில, பெமேட்ரா மாவட்டத்தில் உள்ளது பவமோக்த்ரா கிராமம். இங்கு உள்ள குளத்தில் முதலை ஒன்று வசித்து வந்தது. சுமார் 3 மீட்டர் நீளம் கொண்ட இந்த முதலை கடந்த 130 ஆண்டுகளாக அந்த குளத்தில் வசித்து வந்தது.

நண்பன்
சிறுவர்கள் குளத்தில் குளிக்கும் போது கூட அந்த முதலை எந்த தொந்தரவையும் செய்யாமல் இருந்தது. அதனால் அந்த கிராமத்தினர் அதை நண்பனாகவே பாவித்து வந்தனர்.

பரிசோதனை
இந்நிலையில் திடீரென அந்த முதலை குளத்தில் இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதலைக்கு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரதேச பரிசோதனை நடைபெற்றது. அப்போது முதலை வயது மூப்பு காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடக்கம்
இதையடுத்து அந்த முதலைக்கு இறுதி சடங்கு செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி டிராக்டர் உதவியுடன் இறுதி ஊர்வலமாக முதலை கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
|
மனிதர்களுக்கு செய்ததை..
இந்த சடங்கில் 500 பேர் கலந்து கொண்டனர். அப்போது மக்கள் கண்ணீர் சிந்தினர். மனிதர்கள் இறந்தால் என்னென்ன இறுதிச் சடங்குகள் செய்வரோ அத்தனையையும் இவர்கள் செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications