அரசுப் பேருந்தில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார்: நடத்துநர் கைது

Subscribe to Oneindia Tamil
காணை காவல்நிலையம்
BBC
காணை காவல்நிலையம்

அரசுப் பேருந்தில் மற்ற பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில், தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் மற்றும் உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் அடுத்த கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 20. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவருக்கு, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணமானது.

கல்லூரி விடுமுறை என்பதால் விழுப்புரத்தில் உள்ள அவரது கணவர் வீட்டிலிருந்து கெடிலத்திலுள்ள தாய் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இப்படி, வியாழக்கிழமை இரவு விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசு நகர பேருந்தில் பயணித்துள்ளார்.

பெரும்பாக்கம் அருகே அரசு பேருந்து சென்றபோது பேருந்திலிருந்த அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில் மாணவி மட்டும் தனியாக பயணித்துள்ளார். அப்போது பேருந்து நடத்துநர் சிலம்பரசன் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், அந்த மாணவி கோனூரில் இறங்கி தனது கணவருடன் சென்று விழுப்புரம் காணை காவல் நிலையத்தில் நடத்துநர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காணை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து நடத்துநர் சிலம்பரசனை கைது செய்து விசாரணை செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் அன்புச்செல்வனிடம் போலீசார் விசாரணை செய்தனர். ஓடும் பேருந்தில் அரசு பேருந்து நடத்துநர் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டு விழுப்புரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்து நடத்துநர் சிலம்பரசன்
BBC
அரசு பேருந்து நடத்துநர் சிலம்பரசன்

இந்த சம்பவம் குறித்து காணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. "விழுப்புரத்தில் இருந்து அரசு பேருந்தில் மாணவி பயணித்துள்ளார். அவர் இறங்கும் முன்பு வேறு பேருந்து நிறுத்தத்தில் அனைவரும் இறங்கியுள்ளனர். ஆனால் மாணவி இறங்க வேண்டிய கோனூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. அந்த சமயத்தில் பேருந்தில் தனியாக இருந்த தன்னிடம் நடத்துநர் பாலியல் சீண்டல் செய்ததாக மாணவி புகார் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிந்து, அரசு பேருந்து நடத்துநரைக் கைது செய்து அவர் மீது, பாலியல் சீண்டல், பெண்ணை துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடத்துநருக்கு உடந்தையாக பேருந்து ஓட்டுநர் செயல்பட்டார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஓட்டுநர் பாலியல் சீண்டலுக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்," எனக் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசுப் பேருந்தில் பயணித்த மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நடத்துநர் சிலம்பரசன் மற்றும் ஓட்டுநர் அன்புச்செல்வன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டி.மோகன் உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+