ஒரு சுவிட்சை அழுத்த மறந்ததால் வந்த பிரச்சனை.. பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ்.. பரபர வீடியோ!
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஒரு சுவிட்சை அழுத்த மறந்ததால் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video
மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஒரு சுவிட்சை அழுத்த மறந்ததால் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. மிக சிறிய இடைவெளியில் 170 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து இருக்கிறார்கள்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பி737 விமானம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுள்ளது. அதில் பயணித்த 30 பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது.
இதில் மொத்தம் 170 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். இது குறித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது. ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இதற்கு இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஒரே ஒரு சுவிட்ச்
இத்தனை பிரச்சனையும் ஒரே ஒரு சுவிட்ச் சரியாக வேலை செய்யாத காரணத்தால்தான் ஏற்பட்டு இருக்கிறது. ஆம் விமானிகள் இருக்கும் காக்பீட்டில் உள்ள கேபின் பிரஷர் கன்ரோலர் (அழுத்த கட்டுப்பாடு) சுவிட்சை போட்டு இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை நிகழ்ந்து இருக்காது என்று கூறப்படுகிறது. இதை போடாததால் உள்ளுக்கு உள்ள அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு மக்களுக்கு அதிக அழுத்தம் காரணமாக ரத்தம் வந்துள்ளது.
|
வீடியோ வைரல்
இந்த நிலையில் உள்ளே நடந்த விஷயம் அத்தனையும் வீடியோவாக பதிவாகி உள்ளது. அங்கு உள்ளே இருந்த பயணி ஒருவர் இந்த வீடியோவை படம்பிடித்து வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
|
என்ன நடக்கிறது
இந்த வீடியோவில் பயணிகள் எல்லோரும் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டி இருக்கிறார்கள். உள்ளே ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்த காரணத்தால் இந்த மாஸ்க் மாட்டி இருக்கிறார்கள். இதில் மொத்தமாக 30 பேருக்கு காது, மூக்குகளில் ரத்தம் வந்தது குறிப்பிடத்தக்கது.
|
யாருக்கு
இதில் ரத்தம் அதிகமாக வந்தது சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும்தான் என்று கூறப்படுகிறது. சிறுவர்களுக்கு சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. தன்னுடைய மகனுக்கு ரத்தம் வந்ததை இவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டு ஜெட் ஏர்வேஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.