பார்வை குறைபாடு உடையவர்களும் இனி ரூபாயை கண்டுபிடிக்கலாம்.. ஆர்.பி.ஐ வெளியிட போகும் ஆப்!
விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.
உலகில் சில நாட்டு ரூபாய்களில் மட்டுமே பிரெய்லி முறை இருக்கிறது. அதாவது விழிமாற்று திறனாளிகளும் எளிதாக ரூபாய் நோட்டை அடையாளம் காணும் வகையில் அதில் சில அச்சுகள் இருக்கும்.
அந்த அடையாளங்களை வைத்து நோட்டுகளை அடையாளம் காண முடியும். இந்திய பணத்திலும் இந்த பிரெய்லி முறை இருக்கிறது.
[ இதுதான் திமுகவின் மாஸ்டர் பிளானா? கருணாஸ் அதிரடியின் பின்னணி ]

கடினமாக இருக்கிறது
டிமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நீக்கம் எல்லா மக்களையும் எப்படி பாதித்ததோ அதேபோல் விழிமாற்று திறனாளிகளையும் பாதித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டை அடையாளம் காண முடியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள். புதிய ரூபாய் நோட்டில் எது இரண்டாயிரம், எது ஐந்நூறு என்று தெரியாமல் குழம்பி வருகிறார்கள்.

உருவாக்க போகிறது
இந்த நிலையில்தான் விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஒரு ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை இதற்காக வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. இதை உருவாக்கும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுப்பட்டு வருகிறது.

தனியார் ஆப் நிறுவனம்
இதற்காக தனியார் அமைப்பு ஒன்றின் ஆதரவை நாடி இருக்கிறது. அந்த அமைப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. ஆனால் அந்த அமைப்பு ஆண்ட்ராய்ட் உலகில் ஏற்கனவே நிறைய ஆப்களை வெளியிட்டு இருப்பதாகவும், இது புதிய ஆப் ஒன்றை எளிதாக உருவாக்கி கொடுக்கும் என்றும் கூறியுள்ளது.

மிக சரியாக சொல்லும்
இந்த ஆப் மொபைலில் இருக்கும் சென்சார்கள் மூலம் இயங்க கூடியது. மொபைலின் கேமராவில் ரூபாயை காட்டினால் அதுவே அதை ஸ்கேன் செய்து என்ன ரூபாய் என்று கண்டுபிடிக்கும். அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கும். பின் ஸ்பீக்கர் மூலமாக அதை தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications