ஜார்க்கண்ட்டில் இறுதி கட்ட தேர்தல் - 70% வாக்குப் பதிவு! ஜம்மு காஷ்மீரில் 55% வாக்குப் பதிவு
ஸ்ரீநகர்/ ராஞ்சி: ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் இறுதிக் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 70%; ஜம்மு காஷ்மீரில் 55% வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஏற்கனவே 67 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்து விட்டது. இதில் எதிர்பார்த்ததை விட அதிக சதவீதம் வாக்குகள் பதிவானது. மீதமுள்ள 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஜம்மு, ரஜவுரி, கதுவா ஆகிய 3 மாவட்டங்களில் அடங்கியுள்ள இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இன்று நடைபெற்ற தேர்தலில் துணை முதல்வர் தாரா சந்த், அமைச்சர்கள் சாம்லால் சர்மா, ரமண் பல்லா, மனோகர் லால் சர்மா, அஜய் சதோத்ரா, முன்னாள் எம்.பி., அமைச்சர்கள் லால் சிங், தலிப் ஹுசேன், ஜிதேந்திர பாபு சிங், சட்டசபை முன்னாள் துணைத் தலைவர் ஹைதர் மாலிக் ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் ஆவர். இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 366 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 28 ஆயிரத்து 904 வாக்காளர்கள் உள்ளனர்.
ஜம்மு மாவட்டம், ஆர்னியா பகுதியில் கடந்த மாதம் 27-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர். இதனால் ஜம்மு பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில், போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 400 படைப்பிரிவு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். பாகிஸ்தானையொட்டிய எல்லையோர பகுதிகளிலும், தேர்தலையொட்டி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.
இன்றைய தேர்தலில் தீவிரவாத அச்சுறுத்தலையும் மீறி மொத்தம் 55% வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மொத்தம் 81 சட்டசபை தொகுதிகளில் ஏற்கனவே 65 இடங்களுக்கு தேர்தல் நடந்து விட்டது. மீதமுள்ள 16 தொகுதிகளுக்கு இன்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் போட்டியிடும் 2ஆவது தொகுதியான தும்காவும் ஒன்றாகும்.
இன்றைய தேர்தலை மொத்தம் 208 பேர் எதிர்கொண்டனர். இவர்களில் 16 பேர் பெண்கள். சட்டசபை சபாநாயர் சசாங்க் சேகர் போக்தா, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் லாபின் ஹேம்ப்ரான், ஹேமந்த் சோரனின் உறவினர் சிதா முர்மு உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்கள்.
தேர்தல் நடைபெற்ற 16 தொகுதிகளிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர்களை நிறுத்தியது. பாஜக சார்பில் 15 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
தேர்தல் நடைபெற்ற பகுதிகளான தும்கா, பகுர் ஆகியவைகளில் மாவேயிஸ்ட்டுகள் செல்வாக்கு அதிகமுள்ள இடங்கள். இந்த இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
இன்றைய தேர்தலில் மொத்தம் 70% வாக்குகள் பதிவாகி இருந்தன. இரு மாநிலங்களில் 5 கட்டமாக பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 23-ந் தேதி எண்ணப்படுகின்றன.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications