ஆன்லைனில் அப்பாவி பெண்களை குறி வைத்த ஐஎஸ்ஐஎஸ் என்ஜினியர்
ஜெய்பூர்: அப்பாவி பெண்களிடம் நைசாகப் பேசி அவர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியாவுக்கு அனுப்ப முயன்று வந்துள்ளார் இந்தியாவை சேர்ந்த என்ஜினியர் முகமது சிராஜுதீன்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் துணை மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்ஜினியரான முகமது சிராஜுதீன். அவர் ஆன்லைன் மூலம் பலரை கவர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர வைக்க முயற்சி செய்தார். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி அவர் ஜெய்பூரில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிராஜுதீனின் மனைவியே அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் கூறியதாவது,
நாம் குடும்பத்தோடு சிரியாவுக்கு செல்ல வேண்டும் என என் கணவர் வலியுறுத்தி வந்தார். நான் கர்ப்பமாக இருந்தபோது அவர் எனக்கு போன் செய்து தான் சிரியாவுக்கு செல்ல விரும்புவதாக கூறினார். மேலும் கென்யாவில் இருந்து வந்து ஹைதராபாத்தில் வீட்டு வேலை செய்த ஆமீனா என்ற பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார் என்றார்.
சிராஜுதீன் ஆன்லைனில் பெண்களை தேடி வந்தாராம். அப்பாவியாக இருக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களின் மனதை மாற்றி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருமாறு கூறி வந்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பெண்கள் செக்ஸ் அடிமைகளாக இருப்பதால் அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பவர்கள் பெண்களை தான் தேர்வு செய்கிறார்கள்.
சிராஜுதீன் நைசாகப் பேசிப் பழகிய பெண்களில் சிலர் சிரியாவுக்கு செல்ல தயாராக இருந்ததில் இருந்து அவரின் தந்திரம் தெரிகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications