ஆன்லைனில் அப்பாவி பெண்களை குறி வைத்த ஐஎஸ்ஐஎஸ் என்ஜினியர்
ஜெய்பூர்: அப்பாவி பெண்களிடம் நைசாகப் பேசி அவர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியாவுக்கு அனுப்ப முயன்று வந்துள்ளார் இந்தியாவை சேர்ந்த என்ஜினியர் முகமது சிராஜுதீன்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் துணை மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்ஜினியரான முகமது சிராஜுதீன். அவர் ஆன்லைன் மூலம் பலரை கவர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர வைக்க முயற்சி செய்தார். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி அவர் ஜெய்பூரில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிராஜுதீனின் மனைவியே அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் கூறியதாவது,
நாம் குடும்பத்தோடு சிரியாவுக்கு செல்ல வேண்டும் என என் கணவர் வலியுறுத்தி வந்தார். நான் கர்ப்பமாக இருந்தபோது அவர் எனக்கு போன் செய்து தான் சிரியாவுக்கு செல்ல விரும்புவதாக கூறினார். மேலும் கென்யாவில் இருந்து வந்து ஹைதராபாத்தில் வீட்டு வேலை செய்த ஆமீனா என்ற பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார் என்றார்.
சிராஜுதீன் ஆன்லைனில் பெண்களை தேடி வந்தாராம். அப்பாவியாக இருக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களின் மனதை மாற்றி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருமாறு கூறி வந்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பெண்கள் செக்ஸ் அடிமைகளாக இருப்பதால் அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பவர்கள் பெண்களை தான் தேர்வு செய்கிறார்கள்.
சிராஜுதீன் நைசாகப் பேசிப் பழகிய பெண்களில் சிலர் சிரியாவுக்கு செல்ல தயாராக இருந்ததில் இருந்து அவரின் தந்திரம் தெரிகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications