Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ம.பி. வியாபம் விவகாரத்தில் தொடரும் மர்ம மரணம்-மத்திய அரசின் பார்வையாளர் ஒடிஷாவில் சடலமாக மீட்பு!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: மத்திய பிரதேச தேர்வு வாரியமான வியாபம் விவகாரத்தில் மீண்டும் ஒரு மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது. வியாபம் தேர்வுகளில் மத்திய அரசின் பார்வையாளராக இருந்த விஜய் பஹதூர் ஒடிஷாவில் ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் வியாபம் என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் நடத்திய தேர்வில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பலரும் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.

Vyapam Central observer found dead on railway track in Odisha

டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் உட்பட இதுவரை இவ்வழக்கில் தொடர்புடைய 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வியாபம் தொடர்பான தேர்வுகளில் மத்திய அரசின் பார்வையாளராக பணியாற்றிய விஜய் பஹதூர் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒடிஷாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியான விஜய் பஹதூர் ஒடிஷா மாநிலம் ஜர்சுகுடாவில், ரயில்வே தண்டவாளம் அருகில் சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக, பூரி-ஜோத்பூர் ரயிலில் தனது மனைவியுடன் அவர் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்த மர்ம மரணம் குறித்து ஒடிஷா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பாக கடந்த 2002-ம் ஆண்டு வியாபம் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நம்ரதா தமோர் என்ற மாணவரது சடலம் மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நகரின் அருகே ரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+