ம.பி. வியாபம் விவகாரத்தில் தொடரும் மர்ம மரணம்-மத்திய அரசின் பார்வையாளர் ஒடிஷாவில் சடலமாக மீட்பு!
புவனேஸ்வர்: மத்திய பிரதேச தேர்வு வாரியமான வியாபம் விவகாரத்தில் மீண்டும் ஒரு மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது. வியாபம் தேர்வுகளில் மத்திய அரசின் பார்வையாளராக இருந்த விஜய் பஹதூர் ஒடிஷாவில் ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் வியாபம் என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் நடத்திய தேர்வில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பலரும் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.

டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் உட்பட இதுவரை இவ்வழக்கில் தொடர்புடைய 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வியாபம் தொடர்பான தேர்வுகளில் மத்திய அரசின் பார்வையாளராக பணியாற்றிய விஜய் பஹதூர் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒடிஷாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியான விஜய் பஹதூர் ஒடிஷா மாநிலம் ஜர்சுகுடாவில், ரயில்வே தண்டவாளம் அருகில் சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக, பூரி-ஜோத்பூர் ரயிலில் தனது மனைவியுடன் அவர் பயணித்ததாக கூறப்படுகிறது.
FLASH: Vijay Bahadur,Former IFS and observer for recruitment tests found dead on a railway track in Jharsuguda(Odisha) #VyapamScam
— ANI (@ANI_news) October 17, 2015 இந்த மர்ம மரணம் குறித்து ஒடிஷா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பாக கடந்த 2002-ம் ஆண்டு வியாபம் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நம்ரதா தமோர் என்ற மாணவரது சடலம் மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நகரின் அருகே ரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications