பாஜகவுக்கு 135 தொகுதிகளை ஒதுக்க முடியாது: உத்தவ் தாக்கரே திட்டவட்டம்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 135 தொகுதிகளை ஒதுக்கவே முடியாது என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக- சிவசேனா தலா 135 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது பாஜகவின் கருத்து.

சிவசேனா ஏற்க மறுப்பு
இதனை சிவசேனா ஏற்க மறுப்பதால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை பாஜக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

சாத்தியமே இல்லை
பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடுவது என்பது சாத்தியமற்றது. இதை நான் வெளிப்படையாகவே தெரிவித்தும் இருக்கிறேன்.

கூட்டணி தொடர வேண்டும்
பாரதிய ஜனதா மேலிடத்துக்கும் எங்கள் நிலையைத் தெரிவித்துவிட்டோம். நாங்கள் பாஜகவுடன் 25 ஆண்டுகள் கூட்டணி வைத்திருக்கிறோம். இக்கூட்டணி தொடர வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இந்துத்துவா கொள்கைக்காக கூட்டணி
பாஜக- சிவசேனா கூட்டணியே மகாராஷ்டிரா மாநில தேர்தலில் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இந்துத்துவா கொள்கைக்காகவே பாஜகவுடன் தொடர்ந்தும் கூட்டணி வைத்துள்ளோம்.

எங்கள் நிலை..
இந்த நீண்டகால கூட்டணியை முறிக்கும் வகையில் யாரும் எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம். இதுதான் எங்கள் நிலைப்பாடு.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications