இந்து அறநிலையத்துறையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: வக்பு கவுன்சில் மற்றும் வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினரும் உறுப்பினராக நியமிக்கப்படுவர் என்ற மத்திய அரசின் புதிய வக்பு சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெஞ்ச் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத் துறையில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
மத்திய அரசின் வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 73 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெஞ்ச் முன்பாக தொடங்கியது.

இன்றய விசாரணையின் தொடக்கத்திலேயே, வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கை மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவது பற்றி வாதங்களை முன்வைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் வக்பு சட்டத்துக்கு தடை கோரும் வாதங்களை முன்வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, திமுகவின் வில்சன் உள்ளிட்டோர் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
இந்த விசாரணையின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியது.
உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்:
- இந்துசமய அறநிலையத்துறையில் இந்துக்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் வக்பு வாரியம், வக்பு கவுன்சிலில் பிற மதத்தினரும் நியமிக்கப்படுவதாக சொல்கிறது புதிய வக்பு சட்டம். எதற்காக இந்த புதிய நடைமுறையை கொண்டுவர வேண்டும்? இந்து சமய அறநிலையத்துறையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா?
- 13,14,15-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பழமையான, தொன்மையான மசூதிகளுக்கு நிலப் பத்திரம் எதுவும் இருக்காது. புதிய வக்பு சட்டத்தினால் தொன்மையான, தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மசூதிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? தொல்லியல் சட்டத்தின் கீழ் இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
- வக்பு வாரிய சொத்துகள் அனைத்துமே தவறாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்படி சொல்லிவிட முடியும்?
- வக்பு வாரிய சொத்துகளில் 'பிரச்சனை- Dispute என எதனைக் குறிப்பிடுகிறது மத்திய அரசு
- வக்பு வாரிய சொத்துகள் குறித்த விவகாரத்தில் ஏன் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க முடியாது? ஏன் மாவட்ட ஆட்சியர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு
- இடைக்கால உத்தரவுகள் அனைத்து நாளை வரை நிறுத்திவைக்கப்படும். நாளை பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெறும் போது உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
- வக்பு சொத்துகளை மாவட்ட ஆட்சியர் வகைப்படுத்தலாமே தவிர நடவடிக்கை மேற்கொள்ள கூடாது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications