சோலார் மோசடி: சரிதா நாயருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்
திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான தொழில் அதிபர் சரிதா நாயர் பல முறை விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார் நீதிபதி சிவராஜன்.
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை கமிஷன் முன் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜி ராதாகிருஷ்ணன் ஆதியோர் ஆஜாராகி வாக்குமுலம் அளித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரிதா நாயர் கோர்ட்டில் ஆஜாரான போது முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை அமைச்சர் ஆர்யடன் முகமதுவுக்கு ரூ.40 லஞ்சமும் கொடுத்ததாக கூறியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதையடுத்து கடந்த மாதம் இந்த கமிஷன் முன்பு ஆஜராகி உம்மன்சாண்டி வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் சமீப காலங்களாக பலமுறை சரிதா நாயர் கமிஷன் முன் சரிவர ஆஜராகவிலை என கூறப்படுகிறது. விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் சரிதாவின் மனு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
நேற்று கண்டிப்பாக சரிதா நாயர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி எச்சரித்திருந்தார். எனினும் சரிதா அதை பொருட்படுத்தாமல் விசாரணைக்கு ஆஜராக வில்லை. இதனையடுத்து சரிதாவுக்கு நீதிபதி சிவராஜன் கமிஷன் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இம்மாதம் 26ஆம் தேதிக்குள் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜர்படுத்துமாறு அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications