தாஜ் மஹால் சிவன் கோவிலாக இருந்தது, அது இந்துக்களுக்கே சொந்தம்: வக்கீல்கள் வழக்கு
ஆக்ரா: காதல் சின்னமான தாஜ் மஹால் சிவன் கோவிலாக இருந்தது என்று ஆக்ராவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 6 வழக்கறிஞர்கள் சேர்ந்து நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

ஆக்ராவில் இருக்கும் தாஜ் மஹால் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது. அதனால் தாஜ் மஹாலின் உரிமையை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும். முஸ்லீம்கள் அங்கு பிரார்த்தனை செய்ய தடை விதிக்க வேண்டும். தாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. அந்த கோவிலில் அக்ரேஷ்வர் மகாதேவ் குடியிருந்தார் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கலாச்சாரத்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
தாஜ் மஹால் சிவன் கோவிலாக இருந்தது இல்லை என்று அகழ்வாராய்ச்சி துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் அக்ரேஷ்வர் மகாதேவையும் வாதியாக அந்த வழக்கறிர்கள் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications