வயநாட்டில் பிரியங்கா காந்தி சாதனை தெரியும்.. தமிழ்நாட்டு சுயேச்சை வேட்பாளர்கள் செய்த சாதனை தெரியுமா?
வயநாடு: வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே வயநாடு தொகுதியில் தமிழ்நாட்டைச் சேந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி நிலையில், வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார்.

ராகுல் பதவி விலகியதால் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டன. வயநாடு தொகுதியில் மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 62.92 சதவீதம் வாக்கு பதிவானது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கம் முதலே பிரியங்கா காந்தி முன்னிலை வகிக்க தொடங்கினார்.
கடந்த 2019, 2024 இரண்டு தேர்தல்களில் ராகுல் காந்தி வாங்கிய வாக்குகளை விட பிரியங்கா அதிக வாக்குகள் வாங்க வேண்டும் என வியூகம் அமைத்தனர். திட்டமிட்டபடியே காங்கிரஸ் வெற்றியும் பெற்றுவிட்டது. ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டார்.
அப்போது சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை (64.94 சதவீதம்) பெற்றார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி. 6.47 லட்சம் வாக்குகள் (59 சதவீதம்) வாக்குகளை பெற்றார்.
தற்போது பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகளை பெற்றார். ராகுல் காந்தி 2024 தேர்தலில் 3,62,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு சதவீதம் அடிப்படையில் 64.99 சதவீதம் வாக்கு பெற்றுள்ளார். இதுவும் கடந்த இரண்டு தேர்தல்களில் ராகுல் பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம்.
களம் கண்ட முதல் தேர்தலிலேயே பிரியங்கா பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார். அதே வயநாடு தொகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்மராஜன், நூர் முகமது ஆகியோர் போட்டியிட்டனர். சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் தேர்தல் மன்னன் என்றழைக்கப்படுவார். எங்கு தேர்தல் நடந்தாலும் போட்டியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
கடைசியாக விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இதனுடன் அவர் 244 முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். அதேபோல கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது வயநாடு தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் 45முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் பத்மராஜன் 256 வாக்குகளும், நூர் முகமது 227 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர். இதன் மூலம் பத்மராஜன் போட்டியிட்ட 244 தேர்தல்களிலும் தோல்வியடைந்து தேர்தல் களத்தில் நூதன சாதனை படைத்திருக்கிறார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications