தமிழகத்தைப் போல இந்தி திணிப்பு எதிராக மே.வங்கமும் போர்க்கோலம்!
கொல்கத்தா: மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை தமிழ்நாடு போலவே மேற்கு வங்கமும் மிகக் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது. வங்கமொழி படைப்பாளிகள், எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கையின் பெயரால் இந்தியை இந்தி பேசாத மாநிலங்கள் மீது திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது தொடர்பாக கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் இந்தி பேசாத மாநில் மாணவர்கள் 3-வது மொழியாக இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஓரணியில் ஒன்று திரண்டு போர்க்குரல் கொடுத்து வருகின்றன. இதேபோல் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா என அத்தனை மாநிலங்களும் மத்திய அரசின் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த வரிசையில் மேற்கு வங்கமும் இணைந்துள்ளது.
மேற்கு வங்கத்தின் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இம்முயற்சியை மத்திய அரசு கைவிட வேன்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்தி பேசாத மாநிலங்களின் மொழிகளை வட இந்திய மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள முன்வருமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதேபோல் பல மொழிகள் பேசும் வட கிழக்கு மாநிலங்களிலும் இந்திக்கு எதிரான சலசலப்புகள் வெளிப்படுத்த தொடங்கி உள்ளன.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications