பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டாலும்... மனம் ஏற்க மறுக்கிறது... பிரதமர் மோடி பேச்சு
Recommended Video
போபால்: நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்' என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதை மன்னிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் நிறுத்தப்பட்டுள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், காந்தியை சுட்டுக்கொன்ற நாதூரம் கோட்சே தேசபக்தர் என்றார். கமல்ஹாசன் பேச்சு பதிலளிக்கும் விதமாக பேசிய அவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையானது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது.

100 முறை யோசிக்க வேண்டும்
இந்தநிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள கார்கோன் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், பிரக்யா சிங்கின் கருத்து மன்னிக்க முடியாது என கண்டனம் தெரிவித்தார். பேசுவதற்கு முன் 100 முறை யோசிக்க வேண்டும் என்றார்.

இடைநீக்கம்
பிரக்யா சிங் தாகூர் மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்க மனம் மறுக்கிறது என்றும் பேசினார். இதனிடையே, காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட 3 பேருக்கு பாஜக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. காந்தி பாகிஸ்தானின் தந்தை எனக் கூறிய அணில் சவுமித்ரா என்பவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பகிரங்க மன்னிப்பு
முன்னதாக, நாதுராம் கோட்சே குறித்து பிரக்யா சிங் பேசியது, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், கட்சிக்கு அவரின் பேச்சும் சம்பந்தம் இல்லை என்றும் விளக்கமளித்த பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், கடும் கண்டங்களை பதிவுசெய்தார். இதனைத் தொடர்ந்து, பிரக்யா சிங் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம்
இதற்கிடையே, கோட்சேவை தேச பக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் கூறிய விவகாரம் தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications