அம்மாவை தமிழகத்துக்கு 'வழியனுப்ப' தயாராக உள்ளோம்: கர்நாடக உள்துறை அமைச்சர் சொல்கிறார்
பெங்களூரில் இதுகுறித்து அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூரில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை பெங்களூர் சிறைச்சாலையில் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் கர்நாடக அரசுக்கு கிடையாது. அதே நேரம் இதில் தன்னிச்சையாக எந்த முடிவையும் கர்நாடக அரசு எடுக்க முடியாது.
கோர்ட் உத்தரவை பெற்று, தமிழக சிறைக்கு ஜெயலலிதாவை மாற்றுவதற்கு தமிழக அசு தயாராக இருந்தால், அதற்கு கர்நாடக அரசு மறுப்பு எதுவும் தெரிவிக்காது. நாங்கள் அனுப்பி வைக்க தயாராக உள்ளோம். இவ்வாறு ஜார்ஜ் தெரிவித்தார்.
ஜெயலலிதாவை பெங்களூர் வைத்திருப்பதால், அதிமுகவினர் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே ஜெயலலிதாவை தமிழகத்துக்கே அனுப்பி வைக்க கர்நாடக அரசும், மூத்த அரசியல்வாதிகளும் ஆர்வமாக உள்ளனர். சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா இதேபோன்ற கருத்தை கூறியிருந்த நிலையில், தற்போது காவல்துறை அமைச்சர் ஜார்ஜும் அவரது கருத்தை எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.