கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் - உதயகுமார் அறிவிப்பு
டெல்லி: நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் என்றும், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என்றும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறித்து உதயகுமார் அளித்த பேட்டி:
தமிழக மக்களை உச்சநீதிமன்றம் கைவிட்டுவிட்டது. மக்களின் கருத்துக்களை மதிக்க நீதிமன்றம் தவறிவிட்டது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டதில்லை, அதைப்போலத்தான் இதையும் ஏற்கப்போவதில்லை.
நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். அணு உலைக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். மேல் முறையீடு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். பாதிப்புக்கு உள்ளாகும் மக்களிடம் கருத்துக்களை கேட்டுவிட்டு அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கட்டும்.
இதனிடையே தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். கூடங்குளம் அணு உலை பிரச்னை தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே கருத்து தெரிவித்து வந்தவர் நாராயணசாமி, தீர்ப்பு குறித்து கூறுகையில், உச்சநீதிமன்றம் அளித்த பாதுகாப்பு தொடர்பான 15 பரிந்துரைகளில் 13 பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications