மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதியாக்க விடமாட்டோம்.. விதைகளாக விதைப்போம்.. பிரகாஷ்ராஜ் ஆவேசம்!
மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதியாகக்க விட மாட்டோம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதியாகக்க விட மாட்டோம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் பிறந்தநாளை முன்னிட்டு நான் கவுரி, நாம் எல்லோரும் கவுரி என்ற புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சமுதாயத்தில் மக்களுக்காக போராடுவதற்கு கிடைக்கும் பலன் கவுரி லங்கேஷ் மறைவு என்று அவர் கூறினார்.
மேலும் மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதி செய்ய மாட்டோம், விதைகளாக விதைப்போம் என்றும் அவர் கூறினார். யாராவது ஒரு குரலின் சத்தத்தை அடக்கினால் அது பல குரலாக எழும்பும் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications