Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதியாக்க விடமாட்டோம்.. விதைகளாக விதைப்போம்.. பிரகாஷ்ராஜ் ஆவேசம்!

மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதியாகக்க விட மாட்டோம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதியாகக்க விட மாட்டோம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

We will not allow people to be epitaph who are protesting for public: Prakash Raj

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் பிறந்தநாளை முன்னிட்டு நான் கவுரி, நாம் எல்லோரும் கவுரி என்ற புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சமுதாயத்தில் மக்களுக்காக போராடுவதற்கு கிடைக்கும் பலன் கவுரி லங்கேஷ் மறைவு என்று அவர் கூறினார்.

மேலும் மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதி செய்ய மாட்டோம், விதைகளாக விதைப்போம் என்றும் அவர் கூறினார். யாராவது ஒரு குரலின் சத்தத்தை அடக்கினால் அது பல குரலாக எழும்பும் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் எச்சரித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+