குழந்தைகளின் தவறான இணையப் பழக்கங்களை கண்காணிக்க - பெற்றோருக்கு புது ”ஆப்”!
டெல்லி: தங்கள் குழந்தைகள் இணையதளங்களில் மூழ்கி கிடக்காமல் அவர்களை கண்காணித்து பாதுகாப்பாக வழிநடத்த, பெற்றோர்களுக்கென பிரதியேகமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு அப்ளிகேஷன்கள் சந்தையில் அறிமுகமாகி வருகிறது.
இன்றை சமூக சூழல் மற்றும் கல்வி முறையில் இணைய பயன்பாடு தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. இணையத்தை செல்லும் இடங்களுக்கு கையோடு எடுத்துச்செல்லும் வசதியும் உள்ளது.

ஸ்மார்ட் போன், டேப்லட் கம்பியூட்டர், லேப்டாப் வழியாக உலக தகவல்கள் மொத்தத்தையும் உள்ளங்கையில் கொண்டு வந்துவிடுகிறது இணையம். ஆனால், அதிக நேரம் இணையத்தில் மூழ்கி கிடக்கும் வளர் இளம் பருவகுழந்தைகளுக்கு இதுவே பிரச்னையாகவும் மாறி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு:
எனவே. இணையத்தை பயன்படுத்துவதில் இருக்கும் பாதிப்பையும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இதை கருத்தில் கொண்டு பல தனியார் நிறுவனங்கள், குழந்தைகளை பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்த பெற்றோருக்கு வழி காட்டும் சிறப்பு ஆப்ஸ்களை வெளியிட்டு வருகின்றன.
இணைய கண்காணிப்பு:
இந்த ஆப் மூலும், தங்களது குழந்தைகள் எந்த இணைய தளத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை பெற்றோர்கள் தங்களது கட்டுபாட்டில் வைத்து கொள்ள முடியும். டெல்லியை சார்ந்த தனியார் நிறுவனம் "இகாவாச்" என்ற இணைய கண்காணிப்பு அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு பாதுகாப்பு ஆப்கள்:
இந்த அப்ளிகேஷன், குழந்தைகள் இணையத்தை பயன்படுத்த துவங்கினால், அது பற்றி பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி தெரிவிக்கும்.
மொபைல் கண்காணிப்பு:
இதே போன்று, துபாயை சேர்ந்த ராகவ் மீமணி என்பவர் வடிவமைத்துள்ள "நிஸ் சிந்த்" என்ற இணைய கண்காணிப்பு அப்ளிகேஷன், ‘இன் கம் மிங்', ‘அவுட் கோ யிங்' மற்றும் ‘மிஸ்டு கால்கள்' உள்ளிட்ட தொலைபேசி அழைப்புகள் பற்றி பெற்றோர்களுக்கு தெரிவிக்கும்.
ஆபத்து எச்சரிக்கை:
மேலும், குழந்தைகள் ஆபத்துகளில் சிக்கி கொண்டால் அது பற்றி எச்சரிக்கை செய்து உதவிக்கு அழைக்க ஜிபிஎஸ் வசதியையும், பெற்றோர்கள் பொருத்திக் கொள்ள முடியும்.
தவறான பதிவுகள் குறித்த எச்சரிக்கை:
இதே போன்று, அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள "மாமா பியர்" அப்ளிகேஷன் கடந்த 2012 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, தங்கள் குழந்தைகள், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்கும் வசதி உள்ளது. குழந்தைகள் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி செய்தியை பதிவு செய்தால், அது பற்றி தானாக தகவல் அனுப்பி பெற்றோர்களை எச்சரிக்கை செய்யும்.
நேர நிர்வாகமும் உண்டு:
மேலும், தங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பெற்றோர்களே முடிவு செய்து அதற்கேற்ப நேரத்தை பதிவு செய்யலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications