அரசியல்வாதிகள், கட்சிகளின் ட்விட்டர், இணையதளங்களை வாட்ச் பண்ணும் தேர்தல் ஆணையம்
போபால்: அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் இணையதளங்கள், டிவிட்டர் கணக்குகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலின்போது எந்தவிதமான விதி மீறலிலும் இவர்கள் ஈடுபடாத வகையில் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவே இந்தக் கண்காணிப்பாம்.

6 கட்சிகள் கண்காணிப்புப் பட்டியலில்
இந்த முடிவின்படி 6 கட்சிகளை தேர்தல் ஆணையம் தேர்வு செய்து அவற்றின் இணையதளங்களைக் கண்காணிக்கவுள்ளதாம்.

பட்டியலில் 18 தலைவர்கள்
அதேபோல 18 அரசியல் தலைவர்களையும் தேர்வு செய்து அவர்களின் இணையதளங்கள், டிவிட்டர் பக்கங்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றனர்.

யார் யாரெல்லாம்...
இந்தப் பட்டியலில் சிவராஜ் செளகான், சோனியா காந்தி, திக்விஜய் சிங், உமா பாரதி, நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ், ராகுல் காந்தி, அத்வானி, சசி தரூர், நிதின் கத்காரி, ரவி சங்கர் பிரசாத், ஷானவாஸ் ஹுசேன், ராஜ்நாத் சிங், ராஜீவ் சுக்லா, முக்தர் அப்பாஸ் நக்வி, உமர் அப்துல்லா, அஜய் மேக்கன், எடியூரப்பா ஆகியோர் உள்ளனர்.

எது எதெல்லாம் கண்காணிக்ப்படும்
இந்த அரசியல்வாதிகள், கட்சிகளின் டிவிட் செய்திகள், பத்திரிக்கைகளின் இணையதளங்கள், இ பேப்பர்கள் உள்ளிட்டவை முழுமையாக கண்காணிக்கப்படுமாம்.

உதவிக்கு வரும் புனே சிடாக்
தேர்தல் ஆணையத்தின் இந்த கண்காணிப்புப் பணிக்கு புனேவில் உள்ள சிடாக் நிறுவனம் உதவி செய்யவுள்ளது.

பேஸ்புக் ஓகேப்பா...
அதேசமயம், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் பேஸ்புக்கைக் கண்காணிக்கும் அளவுக்கு அங்கு விதி மீறல் இருப்பதாக தெரியவில்லை என்று தேர்தல் ஆணையம் கருதுவதால் இந்த லிஸ்ட்டில் பேஸ்புக் இடம் பெறவில்லை.












Click it and Unblock the Notifications