மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பின்னடைவு.. 7000 வாக்குகள் வித்தியாசம்.. சுவேந்து அதிகாரி முன்னிலை
கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் அம்மாநில முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
நந்திகிராம் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேற்று வங்க தேர்தல்
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணாமுல் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெல்லும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், பாஜக 100 மேற்பட்ட இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

கடும் போட்டி
அதேபோல இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகளில் ஒரு கட்சி வெல்ல வேண்டும். தற்போது வரை திரிணாமுல் 155 இடங்களிலும் பாஜக 87 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

மம்தா ஷாக்
இந்நிலையில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் சுற்றில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். முதல் சுற்று முடிவில் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு சவேந்து அதிகாரி கூடுதலாக 7000 வாக்குகள் பெற்றுள்ளார். இது திரிணாமுல் தொண்டர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவேந்து அதிகாரி
பல ஆண்டுகளாக சவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்தவர். மம்தா பானர்ஜியின் வலது கரமாக அறியப்பட்டவர் சவேந்து அதிகாரி. இருப்பினும், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் கடைசி நேரத்தில், அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில்ல இணைந்தார். முன்னதாக, அவர் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைய செய்யப்போவதாகச் சவால் விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications