மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியரை கொலை செய்து பிறப்புறுப்பை துண்டித்து! வாயில் திணித்த கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பள்ளியின் ஆசிரியரை கொன்ற கொடூரர்கள் அவருடைய பிறப்புறுப்பை வெட்டி, அவருடைய வாயில் திணித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

அலிபுர்துவார் மாவட்டம், ஜெய்காவ்ன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சான்டாபிர் லாமா. இவர் பள்ளியில் பணியாற்றும் நேரம் போக மற்ற நேரங்களில் சமூக பணிகளை ஆற்றுவாராம். அங்குள்ள ஒரு தேவாலயம் செய்யும் மக்கள் நல பணிகளில் லாமாவும் தன்னை இணைத்துக் கொண்டு தன்னால் ஆன உதவிகளை செய்து வந்தாராம்.

kolkatta crime

இதனால் அப்பகுதி மக்களுக்கு லாமா மீது அன்பு அதிகம். மேலும் லாமாவும் யார் வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பாராம். இப்படிப்பட்ட நிலையில் லாமாவை காணவில்லை என அவருடைய உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் பணியாற்றிய பள்ளியின் பின்புறம் ஒரு உடல் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு போய் லாமாவின் உடலை பார்த்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அளவுக்கு கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டிருந்தார்.

அதாவது லாமாவை கொலை செய்துவிட்டு அவருடைய பிறப்புறுப்பை மர்ம நபர்கள் வாயில் திணித்து விட்டுச் சென்றிருந்த கொடூரம் நடந்திருந்தது. இதையடுத்து உறவினர்களை வரவழைத்த போலீஸார், அந்த உடல் லாமாவுடையதுதான் என அடையாளம் கண்டுக் கொண்டனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கொலையை ஒருவருக்கு மேற்பட்டோர் செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள். விரைவில் கொலையாளிகளை பிடித்து விடுவோம் என போலீஸார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+