மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியரை கொலை செய்து பிறப்புறுப்பை துண்டித்து! வாயில் திணித்த கொடூரம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பள்ளியின் ஆசிரியரை கொன்ற கொடூரர்கள் அவருடைய பிறப்புறுப்பை வெட்டி, அவருடைய வாயில் திணித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
அலிபுர்துவார் மாவட்டம், ஜெய்காவ்ன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சான்டாபிர் லாமா. இவர் பள்ளியில் பணியாற்றும் நேரம் போக மற்ற நேரங்களில் சமூக பணிகளை ஆற்றுவாராம். அங்குள்ள ஒரு தேவாலயம் செய்யும் மக்கள் நல பணிகளில் லாமாவும் தன்னை இணைத்துக் கொண்டு தன்னால் ஆன உதவிகளை செய்து வந்தாராம்.

இதனால் அப்பகுதி மக்களுக்கு லாமா மீது அன்பு அதிகம். மேலும் லாமாவும் யார் வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பாராம். இப்படிப்பட்ட நிலையில் லாமாவை காணவில்லை என அவருடைய உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் பணியாற்றிய பள்ளியின் பின்புறம் ஒரு உடல் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு போய் லாமாவின் உடலை பார்த்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அளவுக்கு கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டிருந்தார்.
அதாவது லாமாவை கொலை செய்துவிட்டு அவருடைய பிறப்புறுப்பை மர்ம நபர்கள் வாயில் திணித்து விட்டுச் சென்றிருந்த கொடூரம் நடந்திருந்தது. இதையடுத்து உறவினர்களை வரவழைத்த போலீஸார், அந்த உடல் லாமாவுடையதுதான் என அடையாளம் கண்டுக் கொண்டனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கொலையை ஒருவருக்கு மேற்பட்டோர் செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள். விரைவில் கொலையாளிகளை பிடித்து விடுவோம் என போலீஸார் தெரிவித்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications