ஜெ. வழக்கு: எதிராக தீர்ப்பு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த தேசத்தின் பார்வையும், பெங்களூரு ஹைகோர்ட்டின் மீதுதான் இருந்தது.
ஜெயலலிதா வழக்கில், அவருக்கு எதிரான தீர்ப்பு வந்தாலோ, அல்லது ஆதரவான தீர்ப்பு வந்தாலோ, அடுத்தகட்டமாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிந்துகொள்ளும் கவலை காலை முதல் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருந்தது.
ஜெயலலிதாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தால்..

விசாரணை நீதிமன்றம்
விசாரணை நீதிமன்றத்துக்கு ஹைகோர்ட் தீர்ப்பு குறித்த தகவல் போகும். இதன்பிறகு விசாரணை நீதிமன்றம், குற்றவாளி/களுக்கு வாரண்ட் அனுப்பும். ஹைகோர்ட் தண்டனையை உறுதி செய்தாலும்கூட, விசாரணை நீதிமன்றம்தான், வாரண்ட் பிறப்பிக்கும் அதிகாரம்மிக்கது.

எந்த நீதிமன்றம்
ஆனால், ஜெயலலிதா வழக்குக்காக, ஏற்கனவே, செயல்பட்ட விசாரணை நீதிமன்றமான, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. எனவே, அதற்கு ஈடான ஒரு கோர்ட் வாரண்ட் பிறப்பிக்கும். செசன்ஸ் கோர்ட் வளாகத்திலுள்ள 37வது எண் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்திருக்க வாய்ப்பிருந்தது.

சரணடைய வேண்டும்
விசாரணை நீதிமன்றம், பிறப்பித்த வாரண்ட், குற்றவாளிக்கு கிடைத்த பிறகு, கோர்ட்டில் அவர் சரண்டர் ஆக வேண்டும். குற்றவாளி, சரணடைந்தது உறுதி செய்யப்பட்ட பிறகு, அதை உறுதி செய்து ஒரு சர்டிபிகேட் வழங்கப்படும். குற்றவாளி சிறையில் அடைக்கப்படுவார்.

சிறைவாசம்
சரண் உறுதி சர்டிபிகேட் இருந்தால்தான், உச்ச நீதிமன்றத்தில், தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பால் மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால், இந்த நடைமுறைகளுக்கு சில நாட்கள் பிடிக்கும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அந்த விசாரணை நடக்கும் காலகட்டத்தில், குற்றவாளி, சிறையில்தான் இருக்க வேண்டும்.

வெளியே வர வாய்ப்பு
ஹைகோர்ட் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினால், அவர் வெளியே வரலாம். ஆனால், அதற்கு சிறிது காலம் பிடித்திருக்கலாம். ஆனால், ஜெயலலிதாவுக்கு












Click it and Unblock the Notifications