நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன? எப்படி நடக்கும்?
Recommended Video

டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த பேச்சு நாடு முழுக்க எதிரொலித்து வருகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன, அது எப்படி நடைபெறுகிறது என்பது குறித்த ஒரு பார்வை இதோ:

நம்பிக்கையில்லா தீர்மானத்தை யார் கொண்டுவரலாம்?
ஒரு அரசு பதவியில் இருக்க வேண்டுமானால், லோக்சபாவில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர் பலத்தை அது கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என எந்த ஒரு உறுப்பினருக்கு சந்தேகம் வந்தாலும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். இதற்காக காரணம் தெரிவிக்க அவசியம் இல்லை. சபாநாயகர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்றால் வாக்கெடுப்பு நடத்துவதே ஒரே தீர்வு.

நம்பிக்கை இல்லா தீர்மானம் எங்கே கொண்டுவர முடியும்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டது லோக்சபா. எனவே அங்கு மட்டுமே, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். ராஜ்யசபாவில் கொண்டுவர முடியாது. லோக்சபா விதிமுறை பிரிவு 198ன்கீழ், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எப்படி கொண்டுவர வேண்டும்?
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது பற்றி காலை 10 மணிக்கு முன்பாக சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வமாக உறுப்பினர் தகவல் தெரிவிக்க வேண்டும். அதை சபையில் சபாநாயகர் வாசித்து காட்டுவார். குறைந்தபட்சம் 50 எம்.பிக்களாவது ஆதரவு இருந்தால்தான், நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு தகுதி பெறும்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் முடிவு என்ன?
நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 நாட்களுக்குள் ஒருநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். முன்னதாக தீர்மானத்தின் மீது, விவாதம் நடைபெறும். ஒருவேளை அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால், உடனடியாக ஆட்சி ராஜினாமா செய்யப்பட வேண்டும்.
-
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக.. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி -
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications