ராம் ரஹீமுக்கு உடனே கைதி டிரஸ்ஸை மாட்டுங்க.. ஒரு சலுகையும் கூடாது.. அதிரடி தீர்ப்பு!
பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராம் ரஹீமை சிறையில் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சன்டிகர்: சீடர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் ராம் ரஹீமுக்கு உடனடியாக கைதிகளுக்கான ஆடையை வழங்க வேண்டும் என்றும் அவருக்கென எந்த வித தனி சலுகையும் காட்டப்பட கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002-இல் தனது ஆசிரமத்தில் சீடர்களாக வந்த இரு பெண்களை சாமியார் ராம் ரஹீம் சிங் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார் என்று அப்பெண்கள் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து கடந்த 25-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு ரோட்டக்கில் உள்ள சுனாரியா சிறையில் தற்காலிக நீதிமன்றம் அமைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இரு தரப்பு வாதமும் நிறைவடைந்து நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியபோது ராம் ரஹீம் தன்னை மன்னித்து விடுமாறு கைகூப்பியும், கதறி அழுதும் கேட்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை.

20 ஆண்டுகள்
இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் தனது உடல்நிலை சரியில்லை என்று நீதிமன்றத்தை விட்டு வெளியே போக மறுத்தார்.

கருணை காட்டுங்கள்
தனக்கு கருணை காட்டவேண்டும் என்றும் கோரினார் ராம் ரஹீம். மேலும் தனது உடல்நிலை சரியில்லை என்றும் தனக்கு ஏதாவது நேர்ந்தால் மாநிலம்தான் அதற்கு முழு பொறுப்பு என்றும் கூறினார்.
Recommended Video


டோட்டலி ஃபிட்
நீதிமன்றத்துக்கு மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் ராம் ரஹீமின் உடல்நிலையை பரிசோதனை செய்தார். அப்போது அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று சான்றிதழ் வழங்கினார் மருத்துவர்.

கைதி சீருடை
நீதிபதி ஜெகதீப் சிங் கூறுகையில், ராம் ரஹீமுக்கென எந்த வித சிறப்பு வசதிகளும் செய்து தரக் கூடாது. சக கைதிகளை எப்படி நடத்துகிறீர்களோ அப்படிதான் நடத்த வேண்டும். அவருக்கு உடனடியாக சிறை கைதி சீருடை தாருங்கள் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications