Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதுகில் குத்தியதால் கோபம்.. கூட்டணி வைக்க நிதிஷ் குமாருக்கு பாஜக போட்ட கண்டிஷன்! ஆடிப்போன ஜேடியூ

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ‛இந்தியா' கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் தனது பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவில் இணைய நிதிஷ் குமாருக்கு அக்கட்சி மேலிடம் முக்கிய கண்டிஷன் போட்டுள்ளதாகவும், அதன் கேட்டு ஜேடியூ கட்சியே ஆடிப்போய் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பீகாரில் கடந்த 2020ல் சட்டசபை தேர்தல் நடந்தது. பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைந்தன. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

What is the condition to Nitish Kumar if he wants to return to the alliance with BJP? details here

பீகாரை பொறுத்தமட்டில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் அந்த தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபையே அமைந்தது.

அந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதற்கு அடுத்தப்படியாக பாஜக 74 தொகுதிகளை கைப்பற்றியது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வென்றது. இருப்பினும் பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல்வரானர்.

ஆனால் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமாரை காலி செய்ய பாஜக திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து 2022ல் வெளியேறி லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முதல்வரானார். இது பாஜகவை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. மேலும் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்த நிதிஷ் குமார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பு செய்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கினார்.

ஆனால் ‛இந்தியா' கூட்டணியில் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. அவர் தன்னை பிரதமர் வேட்பாளராகவும், ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்க விரும்பினார். ஆனால் பிற எதிர்க்கட்சிகள் அதனை செய்யவில்லை. மல்லிகார்ஜுன கார்கே ‛இந்தியா' கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது நிதிஷ் குமாருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் நிதிஷ் குமார் மீண்டும் தங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் முக்கிய கண்டிஷனை பாஜக மேலிடம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பாஜக கூட்டணி வைக்க முதலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்பிறகு பாஜக சார்பில் ஒருவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அவருக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளையில் நிதிஷ் குமாருக்கு மத்தியில் புதிய பதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் மத்தியில் அமையும் பாஜக ஆட்சியில் நிதிஷ் குமாருக்கு முக்கிய இடம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவை சேர்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்ற இந்த கண்டிஷனால் நிதிஷ் குமார் தரப்பு ஆடிப்போய் உள்ளதாம்.

மேலும் பாஜகவின் இந்த கண்டிஷனுக்கு அவர் ஒப்புக்கொள்வாரா? என்பது தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக அமைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க நிதிஷ் குமார் பீகார் மாநில சட்டசபையை மொத்தமாக கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திப்பது பற்றியும் ஆலோசித்து வருகிறாராம். இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் நிதிஷ் குமார் விவாதித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+