உத்தரகாண்ட்: ரிசார்ட், சட்ட ஆலோசனை என பில்ட்-அப் கொடுத்த காங்கிரஸ்.. கடைசியில் பார்த்தால் படுதோல்வி!
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது வரை வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகள், காங். தலைவர்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சாடி உள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் இரு கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப வெளியான பெரும்பாலான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளிலும் தொங்கு சட்டசபை அமையவே அதிகம் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.

காங். நம்பிக்கை
அதேநேரம் இந்த முறை தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாகவே இருந்தது. எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளைக் காட்டிலும் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை அமைப்போம் என்று நம்பியது உத்தரகண்ட் காங்கிரஸ் தலைமை! கடந்த சில நாட்களாக உத்தரகண்ட் காங்கிரஸ் வேட்பாளர்களின் பேச்சைக் கவனிப்போருக்கு இது தெளிவாகத் தெரிந்திருக்கும்.

எல்லாவற்றுக்கும் பிளான்
பெரும்பான்மை கிடைக்காமல், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் பக்காவாக திட்டம் போட்டு இருந்து காங்கிரஸ். பாஜக குதிரை பேரம் நடத்தும் எனக் குற்றஞ்சாட்டிய உத்தரகண்ட் காங்கிரஸ் தலைமை, தனது வேட்பாளர்கள் அனைவரையும் ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்தது. தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஆளுநர் சந்தித்து ஆட்சி அமைக்கவும் கூட திட்டமிட்டிருந்தது.

காங். எதிர்பார்ப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் 2 முறை முதல்வர்களை மாற்றியது பாஜக. முதலில் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை நீக்கிவிட்டு தீரத் சிங் ராவத் முதல்வராகக் கொண்டு வரப்பட்டார். அவரது செயல்பாடுகளும் அதிருப்தியை ஏற்படுத்தவே கடந்த 2021 ஜூலை மாதம் புஷ்கர் சிங் தாமி உத்தரகண்ட் முதல்வரா நியமிக்கப்பட்டார். இது பாஜகவுக்குப் பின்னடைவைத் தரும் என்று நம்பியது காங்கிரஸ்! கொரோனா பரவல், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சூழல் உள்ளிட்டவையும் தனக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது.

சிறப்பு குழுக்கள்
மேலும், தேர்தலுக்குப் பின் விரைவாக முடிவுகளை எடுக்க ஏதுவாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ராஜ்யசபா எம்பி தீபேந்தர் ஹூடா உள்ளிட்டோர் டேராடூனில் முகாமிட்டிருந்தனர். அதேபோல உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பிரசாரக் குழு பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத் டேராடூன் சென்றார். அவர், காங்கிரஸ் பார்வையாளர் குழுவுடன் இணைந்து, நிலைமையைக் கண்காணித்து, தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளார். தேவைப்பட்டால் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடும் வகையில் காங்கிரஸ் தனது சட்டக் குழுவையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

தேர்தல் களம்
ஆனால், தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்புகளைச் சுக்கு நூறாக நொறுக்கி உள்ளது. உத்தரகண்ட்டில் மொத்தம் 70 இடங்கள் உள்ள நிலையில், அதில் 41 இடங்களில் இப்போது பாஜக முன்னிலையில் உள்ளது. அதீத நம்பிக்கையில் இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 25 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதே டிரெண்ட் தொடரும் பட்சத்தில், பாஜக உத்தரகண்ட் மாநிலத்தைத் தக்க வைக்கும்.

கண்டறிய முடியவில்லை
இந்தத் தேர்தல் முடிவுகள் உத்தரகண்ட் மக்கள் பாஜகவை நிராகரிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இதைத் தாண்டி மற்றொரு முக்கிய விஷயத்தையும் இது உணர்த்துகிறது. உத்தரகண்ட்டில் களத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களாலும் கூட தேர்தல் களத்தையும் மக்களின் எண்ண ஓட்டத்தையும் கண்டறிய முடியவில்லை என்பதே காட்டுகிறது. இதற்கான காரணத்தை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் காங். உள்ளது.
Recommended Video

அந்நியமான காங்கிரஸ்?
ஏற்கனவே, காங்கிரஸ் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிட்டதாகவும் அக்கட்சியின் தலைவர்கள் மக்களுடன் தொடர்பில் இருப்பதில் என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் சூழலில், உத்தரகண்ட் தேர்தலில் நடக்கும் இவை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணிகளாலே உத்தரகண்ட் மாநிலத்தில் பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்த்த காங்கிரசுக்குப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications