ஆட்சேபகரமான தகவல் பரிமாற்றம்.. மகாராஷ்டிராவில் வாட்ஸ்-அப் குரூப் அட்மின் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: வாட்ஸ்-அப் குரூப்பில் ஆட்சேபனைக்குரிய வீடியோ மற்றும் தகவல்களை வெளியிட்டதற்காக அந்த கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டம், சாகுர் தெக்சில் என்ற பகுதியை சேர்ந்த வாட்ஸ்-அப் குரூப் அட்மின் மற்றும் அதன் உறுப்பினர்கள் மூவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

போலீஸ் தரப்பில் கூறியது: வாட்ஸ்-அப் குரூப்பில் ஆட்சேபனைக்குரிய வீடியோ மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, குரூப்பின் அட்மின் மற்றும் உறுப்பினர்களான, சிவாஜி பார்சே, ராஜ்குமார் தெலாங்கே, அமோல் சோம்வான்ஷி மற்றும் மனோஜ் லாவ்ஹராலே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களை கோர்ட்டில் ஒப்படைப்போம்.
இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, 153, 34 மற்றும் 67 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது . இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications