திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த இடத்தில் பேசும் திறன் பெற்ற லண்டன் வாலிபர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வாய் பேச முடியாமல் இருந்த லண்டனில் வசிக்கும் இந்திய வாலிபருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவலிலுக்கு வந்தபோது பேசும் திறன் கிடைத்துள்ளதாம்.

இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

டெல்லியை பூர்வீகமாக கொண்டவர் பிரதீமா. இவர் கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய 18 வயது மகன் தீபக். சிறுவனாக இருந்த போதே தீபக்குக்கு பேச்சு வரவில்லை. பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.

When London youth gets speaking ability in Tirupati temple

சில ஆண்டுகளுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பிரதீமா குடும்பத்தினர், தீபக்குக்கு பேச்சு வர வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த தீபக்குக்கு திடீரென்று பேச்சு வந்தது.

அவர் பேச ஆரம்பித்ததை பார்த்ததும் அவரது தாயார் பிரதீமாவும், குடும்பத்தினரும் மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். இவ்வளவு நாளாக பேச முடியாமல் இருந்த தனது மகன் திடீரென்று நன்றாக பேசியது அற்புதம் தான் என்று பிரதீமா நிருபர்களிடம் தெரிவித்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+