லோக்சபாவில் 'ஆப்சென்ட்' அமைச்சரை தவறுதலாக அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபாவில் அமைச்சர் பியூஷ் கோயல் இல்லாத நிலையில் அவரை தவறுதலாக பிரதமர் மோடி நேற்று அறிமுகப்படுத்தினார்.

லோக்சபாவில் நேற்று சபாநாயகர் தேர்வான பின்னர் தமது அமைச்சரவை சகாக்களை எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்து பேசினார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி ஒவ்வொரு அமைச்சராக அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது இணை அமைச்சர் பியூஷ் கோயலின் பெயரையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஆனால் அவர் சபையில் இல்லை. இதை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர், அவரை அடுத்த கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று பிரதமர் கூறினார். இணை அமைச்சர் பியூஷ் கோயல், மின் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக குஜராத் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications